உங்களுடன் ஆரவாரம் - சில நிமிடங்கள்

வணக்கம்

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி,பல்வேறு காரணங்களாலும் சிறிது காலம் உங்களை சந்திக்க முடியாமையிட்டு மிக கவலையடைகின்றேன்
,கொழும்பில் பதிவர்கள் சந்திப்பில் எடுத்துக்கொண்ட கருத்துக்கு அமைவாக பல பதிவர்கள் பதிவுலகத்தைவிட்டு மறந்து விட்டார்களோ அல்லது விலகிவிட்டார்களோ என்ற கேள்வி என்னை வெகு சீக்கிரத்தில் இதை எழுதத்தூண்டியது, நிச்சயமாக பதிவுலகத்தைவிட்டு நான் ஒருபோதும் விலகி இருக்கவில்லை.பதிவுகள் இடுவதற்க்கு மாறாக நான் பதிவுலகத்தில் வரும் அனைத்துப்பதிவுகளின் வாசகனாக இருந்து வந்தேன்,வருகிறேன்.

நேரங்கள் காலங்கள் எனக்கு அமைவாக வரும்போது தொடர்ந்து தொடர் பதிவுகளை நான் இடுவதற்கு தயாராகவுள்ளேன்,அதுவரை ஓரிரண்டு பதிவுகளையாவது உங்களோடு பகிர்ந்து அவ்வப்போது உங்களுடன் நான் இருக்கவுள்ளேன் என்று என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்,
அதைவிட என்னால் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து அதனூடாக உங்களுடன் கூடியிருக்கவில்லையே என்று மிகக்கவலைப்பட்டவன் நான்.
எம் நீண்டகால எதிர்பார்ப்பு கூடியளவு பதிவர்கள் ஒன்றுகூடி உலகளவில் பேசும்படியாக அமையவேண்டுமென்றிருந்தது,அதற்கமைவாக கொழும்பில் பதிவர் சந்திப்பு முதற்தடவை இடம்பெற்றிருக்கிறது,அதை நேரடியாக பார்க்ககிடைத்ததும் எமது எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியும் ஒட்டுமொத்தமாக மனதில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது,மிக மகிழ்ச்சி,அதேபோல் அப்படியான பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்த அனைத்து பதிவர்களுக்கும் இலங்கையின் ஒரு வலைப்பதிவாளன் என்ற வகையில் என் வாழ்த்து்க்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறுவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் கூட இடம் பெறுவதாக கேள்வியுற்றேன்,வாழ்த்துகள்,

ஆகவே வலைப்பதிவாளர்களுடன் நானும் கைகோ்ர்த்து உங்கள் ஆதரவுடன் ஆரவாரம் தொடர்ந்தும் ஆரவாரிக்கும்

0 comments: