‘’நாம் சாணேற முயன்றால் எவரோ முழத்தளவுக்கு கீழே இழுக்கின்றார்கள்.’’ குமுறுகின்றார்-இளையதம்பி தயானந்தா


‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் மற்மொரு இதழ் வெளியாகியுள்ளது. கால சூழ் நிலையால் நீண்ட இடை வெளியின் பின் வெளியாகும் சஞ்சிகை இது வாகும்.
மாதத்திற்க்கு இரு முறை வெளியாகி கொண்டு இருந்த ‘’இருக்கிறம் சஞ்சிகை’’ யார் கண்பட்டுதோ தெரியவில்லை. இப்போது இரண்டு மாதத்திற்க்கு 1இதழ் என்ற வகையில் வெளியாகின்றது.

தாமதம் பற்றி ‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் குறிப்பிடும் போது. ‘’நாம் சாணேற முயன்றால் எவனோ அல்லது எவரோ முழத்தளவு கீழே இழுக்கின்றார்கள.’’ என்று குறிப்பிட்டு இப்படி ஒரு உற்சகமான கருத்தை சொல்லுகின்றார். ‘’தை பிறந்தால் வழி பிறக்கும்’’ என்பதில் தான் எல்லோரையும் போலவே எமக்கும் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் யாருககு என்பதில் தான் தீராத சந்தேகங்கள். சஞ்சிகையில் தலையங்கம் இட்டு முதற் பக்கத்தை வணக்கத்தில் முடிப்பதற்க்கு கிடையிலும், முழுவாழ்க்கையிலும் எத்தனை முறை திருத்த வேண்டியிருக்கின்றது ஆண்டவரே!! என்று குறிப்பிடுகின்றார்.

இது அவ்வாறு இருக்க ‘’இருக்கிறம்’’ வாசகர் மத்தியில் இப்படியும்ஒரு வதந்தி பரவியது. ‘’இருக்கிறம்’’ இருக்கின்றதா என்ற கேள்வி. இக்கருத்தை உடைத்து எறியும் வகையில் வெள்ளவத்தை புத்தக கடை ஒனறில் சஞ்சிகை கிடைத்தது.

நானும் ஒரு சஞ்சிகையை வாங்கி கொண்டேன். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த இதழ் தைப் பொங்கல் வெளியீடாக அமைந்து இருக்கின்றது.

இந்த சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியாகி போது. நான் சஞ்சிகையினை ‘’ஆரவாரம்’’ ஊடாகஅறிமுகம் செய்யும் போது. இப்படி குறிப்பிட்டு இருந்தேன். ‘’இலங்கையில் இருந்து வெளியாகிய பல சஞ்சிகைகள் பல காலம் வெளி வந்து பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் போனது என்றும். அப்படி இல்லாமல் ‘’இருக்கிறம்’’ சஞ்சிகை அவற்க்கு முன் மாதிரியாக விளங்க போகின்றது. என்று எழுதி இருந்தேன். அக் கருத்து பொய்யாகுமா என்ற பயம் எற்பட்டது. ஆனால் இப்போது ஆசிரியரின் உறுதி பிரமாணம் மூலம் அப் பயம் ஓடி விட்டது.

இனி சஞ்சிகையை பார்போம். பொங்கல் காட்சியுடன் இதழின் அட்டை வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை அட்டை பக்கத்தில் வழமை போல் அதிக தென்னிந்திய நடிகர்களின் படங்களை போட்டு அலட்டி கொள்ளாமல். இம் முறை தமிழர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் அட்டை படம் அமைந்து இருக்கின்றது.

வழமைபோல் எமது சக பாடி கானா பிரபா ‘’நிலக்கிளி’’ பாலமனோகரனுடன் நடாத்திய நேர்காணல் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் சென்ற இதழின் தொடர்ச்சியாக அமைந்து இருக்கின்றது. கானா பிரபாவின் ‘’பயண கட்டுரை’’ ஒன்று இந்த சஞ்சிகையில் தொடராக வெளி வந்து அந்த கட்டுரை நிறைவு பெறமல் முற்றும் பெற்றது. அந்த வகையில் படைப்புகள் வாசகர் மத்தியில் முழுமையாக போய் சேர வேண்டும் என்பதே எனது கருத்து.

பனையடிப்பக்கம் ஒரு சிறப்பான கவிதை ஓன்றும,; த.ஜெயசீலனின் இரண்டு கவிதைகளும்.சக பதிவாளர் மு.மயூரன் எழுதிய தபுண்டு என்ற கட்டுரையும் தொடர்ந்து சிறி லங்கா பாஸ்போட்,பழிக்குபழி,வட்டம்,கலைந்த பக்கங்கள் ,மறக்க முடியுமா? போன்ற படைப்புகளுடன் ச.முருகானந்தன் எழுதிய சிறுகதையும் வெளியாகியுள்ளது.

கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘’வானொலிக் கால நினைவுகள்’’ என்ற தொடர் கட்டுரையில் கே.எம் வாசகர் பற்றிய தகவல்கள் காணக் கூடியதாக இருக்கின்றது.

இங்கு குறிப்பிடும் வகையில் ‘’அவளின் பொங்கல் நினைவுகள்’’ என்ற படைப்பு வெளியாகியள்ளது. வெள்ளவத்தையில் வசிக்க கூடிய யாழ் வாசியான ஒரு முதிய பெண்மணியை வைத்து படைப்பு பின்னப்படுகின்றது. அவரிடம் சென்ற சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் குழு .அவரிடம் கேள்வி கேட்கின்ற போது. ஆச்சி உங்களிடம் பொங்கல் பற்றி கருத்து கேட்க்க வந்தனாங்கள். என்று குறிப்பிடுப்பிடும் போது கருத்து என்ற சொல் புரியாமல் கரும்போ? என்று அந்த ஆச்சி கேட்ப்பதாக அமைகின்றது. இங்கு எனக்கு குழப்பத்தை தருகின்றது. யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு முதிய பெண்மணிக்கு ‘’கருத்து’’ என்ற சொல் அறிந்து இருக்க முடியவில்லை. என்பதை என்னால் எற்று கொள்ள முடியாது. யாழ் மண்ணில் எல்லோரின் வாயில் இருந்து வரும் சொல் ‘’கருத்து’’ தான். இதனை சரி என்று. ஆசிரியர் பீடத்தில் இருக்க கூடிய யாழ் மைத்தர்கள் எந்த வகையில் எற்று கொண்டார்கள். என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது.

தவறான தகவல்லை எமது வளர் சமூகத்திக்கு விதைத்து செல்வது எவ்வளவு சரியான விடயம் என்பதை படைப்பை வரைந்தவர் உணர வேண்டும்.

மாரிமுத்து சிவக்குமார் எழுதிய ‘’ரொட்டிக்கும் பாணுக்கும்’’ என்ற கவிதையுடன் பாலைமண்ணில் என்ற தலைப்பிலான அப்துர் ரகுமான் எழுதும் தொடர் பயண கட்டுரையும் பதிவாகியுள்ளது.

அவசர அவசரமாக இந்த சஞ்சிகை வெளிக் கொண்டு வர முற்பட்டு இருந்தாலும். கூடிய வரை சஞ்சிகையின் பக்க வடிவமைப்புக்களில் அதிக கவனம் செலுத்தி சஞ்சிகையை வெளியீடு செய்து இருப்பது பாரட்டக்க கூடியதாகும்

இலங்கை வானொலியில் ‘’உடுவைத் தில்லை’’யின் உரை






தைப் பொங்கல் அன்று காலை. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் சக பதிவாளரும் இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமான உடுவை எஸ். தில்லை நடராசா அவர்கள் நிகழ்த்திய உரையின் பகுதியை நீங்கள் படிக்க முடியும்.

உலகெங்கும் வாழும் தமிழினம் கொண்டாடும் பண்டிகைகள் பல இருப்பினும் தனிச்சிறப்புக்குரிய பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை திகழ்கிறது. ஆங்கிலேயரால் ஜனவரி எனவும் சிங்களமக்களால் துருது எனவும் அழைக்கப்படும் மாதம் தமிழ்மக்களால் “தை” எனவும் தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் தினம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தினம் “உழவர் திருநாள்” எனவும் “உழைப்பாளிகள் பெரு நாள்” எனவும் சிறப்பித்துச்சொல்லப்படுகிறது.


தொழில்கள் பல்கிப்பெருகுவதற்கு முன் அநேகமாக பெரும்பாலானவர்களின் உயிர்நாடியாக உழவுத்தொழிலே விளங்கியது. மழையை நம்பியும் மாட்டை நம்பியும் வயலில் இறங்கிய விவசாயி மாரிமழை நிற்கும் தறுவாயில் வயலில் மணிமணியாக முற்றிய நெற்கதிர்களைக்கண்டு களிப்பில் ஆழ்வான். முற்றிய கதிர்கள் அறுவடையாகும் போது தைமாதம் பிறக்கவும் சரியாக இருக்கும். அன்றைய தினம் புதிய பச்சரிசியை புதுப்பானையில் இட்டு பால் வெல்லச்சர்க்கரை கஜூ முந்திரி வற்றல் ஏலம் முதலியன சேர்த்து பொங்கி மகிழ்வான். உழவன் வாழ்வில் சூரியன் முக்கிய இடம் பெறுவதால் அதிகாலைப்பொழுதில் பால் பொங்கல் செய்து சூரியனை வணங்கி பொங்கலை சூரியனுக்குப்படைப்பான். மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. உலகம் இயங்கவும் உயிர்கள் வாழவும் உழவுத்தொழில் செழிக்கவும் உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகவும் பொங்கல்; தினம் கொண்டாடப்படுகிறது. இல்லங்களிலும் இந்து ஆலயங்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. தமிழர் உணவில் முக்கிய இடம் பெறுவது சோறு. எனவே வயலில் நெல் விளைவதற்கும் பயிர் வளர்வதற்கும் சூரிய ஒளி தேவை. சூரியன் உதிக்கும் நேரம் காலை எனவும் மறையும் நேரம் மாலை எனவும் அழைக்கப்படும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு எனவும் மறையும் திசை மேற்கு எனவும் சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில் சூரியனை பார்த்து இ;டது கையிருக்கும் பக்கம் வடக்குத்திசை எனவும் வலது கை காட்டும் பக்கம் தெற்கு திசை எனவும் அறிய முடியும்.
சூரியன் ஆட்சி செலுத்தும் பொழுது பகல் எனவும் கண்ணுக்குத் தெரியாத பொழுது இரவு எனவும் அழைக்கப்படும். அக்காலத்து மக்கள் காலம் நேரம் திசை எல்லாவற்றையும் சூரியனை வைத்தே கணித்தார்கள். கடலிலிருந்தும் வாவிகளிலிருந்தும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக மேலெழுந்து பின்னர் மாறி மழையாகப்பொழிய நீரிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் பயிர்கள் தம்முணவைத்தாமே தயாரிக்து வளர அப்பயிர் உயினங்களின் உணவாகின்றது.

தை மாத அறுவடையில் உழவன் வாழ்வில் பொருள் சேர கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். புதிய தொழில் முயற்சிகள் தொடரும். திருமணங்கள் இடம் பெறும். பலநாட்கள் தொடர்ந்து வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒய்வாக பொங்கலன்று கலை விளையாட்டு என பொழுதை மகிழ்வாகக் களிப்பர்.

இயந்திர சாதனங்கள் கண்டுபிடிக்க முன் உழவரின் முழுத்தொழிலும் மாடுகள் மூலம் நிறைவேற்றப்பட்டன. மாட்டால் நிலத்தை உழுதல்- மாட்மெருவை உரமாகப்பயன் படுத்தல-; மாடு கட்டி வண்டில் இழுத்தல் என ஒவ்வொரு நிகழ்விலும் மாடுகள் முக்கிய இடம் பெற்றதால் பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப்பொங்கலாகியது. மாடுகளையும் நீராட்டி அலங்கரித்து
பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பது தமிழர் பண்பாடு.
நன்றி,
இலங்கை வானொலி,
தமிழ்ச் சேவை.

‘’நான் ரெடி நீங்கள் ரெடியா’’ பொங்கல் சாப்பிட




எங்கள் வீட்டில் பொங்கல் பொங்கி முடியும் வேளையை நெருங்கி விட்டது. தாத்தா தேவாரம் பாட ரெடி. அப்பா தேங்காய் உடைத்து பொங்கல் படையலை சுற்றி இளநீர்ரை ஊற்ற ரெடி.

அன்பு உறவுகளே பொங்களோ பொங்கல் என்று சொல்லி சாப்பிடுங்கள்.

மீண்டும் ஆரவாரம் தனது அன்பு உறவுகளுக்கு தனது தைத் திரு நாள் வாழ்த்தை தெருவிக்கின்றது.




பொங்கல் வாழ்த்துக்கள்( ‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்)


அன்பு சகோதர சகோதரிகளுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.


‘’உறுதியும்’’ உறுதியற்ற வாழ்வும்

பட்டாசை
நான் பார்த்து இல்லை
நான் பட்டாசு வாங்கியது இல்லை.
ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........


நீங்கள் இன்டைக்கு உங்கள்
வயலுக்கு சில வேளை போகலாம்..........
நன்றி சொல்ல

எங்கள் வயலின் இருப்பிடத்தை
நான் வரை படத்தில் தான் அறிவேன்.
அக்காவின் திருமணத்திற்க்கு
அக்கா,அத்தான் பெயரில்
அப்பா உறுதி முடித்த அந்த வயலில்


உறுதி இல்லாமல் ''சில்வா''வும்
அவன் நண்பர்களும் ஏதோ விதைத்து உள்ளனர்....







;