இந்த வாரம் வலைப்பூக்களில் ''காண்டீபனின் இயற்கை''

தினக்குரல் வார மலர் '' வலைப்பூக்களின்'' 16 வது மலர் இதுவாகும்.

சென்ற வார வலைப்பூக்களில் ''பஹீமாஜஹானின் கவிதைகள்''

சென்ற வாரம் ''தினக்குரல் வாரமலரில்'' வலைப்பூக்கள் பகுதியில் இவரின் வலைப்பதிவு மலர்ந்துள்ளது.


1990களில் எழுத்துதுறைக்குள் நூழைந்த பஹீமா அவர்கள். இது வரைக்கும் பல கவிதைகளை எழுதியுள்ளார். குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு கணித ஆசிரியர்ராக பணியாற்றும் இவரின. கவி ஆற்றலை வெளிப்படுத்தும் முகமாக (ஒரு கடல் நீரூற்று) என்ற நூல் அமைந்தது. சஞ்சிகைளில் மட்டும் எழுதி கொண்டிருந்த இவர் தற்போது வலைப்பதிலும் தனது கவிதைகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்.

போட்டி போட்டுகொண்டு இவரின் கவிதைகளை பிரசுரம்செய்யவும் ,தங்களின் இணையதள சஞ்சிககைகளிலும் பதிவு செய்யவும் விருப்பம் கொண்ட இலக்கிய கூட்டத்துக்குள் முழுமையாக சிக்காமல் தனது தனித்துவான பதிவாக அமைய வேண்டும் என்ற விருப்பில் இவர் தனக்கேன ஒரு வலைப்பதிவை உருவாகியது மிகவும் பாரட்ட கூடிய விடயமாகும்.

இவரின் கவிதைகளை படிக்கும் போது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றது. இவர் பதிவு செய்துள்ள சில கவிதைகளின் பகுதிகளை தருகின்றேன்.

ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்இ
தோட்டத்து ஒற்றையடிப் பாதையின் சருகுகளைச்
சிறு மண் வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே

இவரின் இக் கவிதையை படித்த எனக்கு இவரின் ஆரம்ப பதிவுகளையும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ''கோழிக்குஞ்சு ''என்ற கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!
கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது


மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!


இக் கவிதையை படித்து விட்டு உங்களின் கருத்தை பஹீமாவிடமே சொல்லுங்கள்.இன்னுமொர் கவிதை இக்கவிதையை பற்றி பேச எனக்கு தகுதியுண்டா என்று தெரிய வில்லை. நீங்களே படித்து பார்ங்கள்.

ஆண்களை மயக்கும்மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டீச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்இபிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

எனவே கவிதை என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். என்று கூறும் போது பஹீமா வின் இந்த பதிவை சுட்டிக்காட்டலாம்.


இவரின் வலைப்பதிவை பார்வையிட -
www.faheemapoems.blogspot.com/

கிருஷ்ணி ஜெயநாயகத்தின் ''கல்லறையில் காதல்''



நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்து சொல் வழக்கில் அமைந்த வானொலி நாடகம் ஒன்றை ரசிக்க முடிந்தது.

சிறுவயதில் இருந்து இலங்கை வானொலி தமிழ்சேவையில் ஒலிபரப்பாகும் அனைத்து நாடங்களையும் கேட்க்கும் சந்தர்ப்பம் நிறையவே கிடைத்தது. குறிப்பாக இலங்கை வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஒலிபரப்பாகும். ஆராலியர் ந.சுந்தரம்பிள்ளை , எஸ் எஸ்.கணேசபிள்ளை ஆகியோரால் எழுதப்பட்ட யாழ்பாணத்து சொல் வழக்கில் அமைந்த நாடங்களை கேட்டு விட்டுதான் நித்திரைக்கு செல்வது வழக்கம்.

தற்போது புதிய வானொலிகளின் வருகையால் நான் முன்னர் ரசித்த நாடங்களை இப்போது ரசிக்க முடிவதில்லை என்று சொல்லாம். இருந்தாலும் பழைய நாடக நினைவுகளை நினைக்கும் போதெல்லாம். எனது கையிருப்பில் இருக்கும் வானொலி நாடக ஒலிபேழைகளை மீண்டும் ஒரு முறை கேட்டு ரசிக்க தவறுவதில்லை.

ரசிகர்களின் மனங்களில் குடிகொண்ட வரணியூரானின் ''அசட்டுமாப்பிள்ளை'' கே.எஸ். பாலச்சந்திரனின் ''வாத்தியார் வீட்டில்'' பாகம் 1,2,3 , ''அண்ணை றைற்'' புளுகர் பொன்னையா, போன்று இன்றைய இளம் படைப்பாளிகளால் நாடக ஒலிபேழைகள் வெளிவரவேண்டும் என்று எனது நீண்ட நாள் விருப்பம்.
எனது எதிர்பார்ப்புக்கும் நாடக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் முற்று புள்ளி வைத்திருக்கின்றது. இலங்கை தமிழோசை இணைய தள வானொலி. தனது ஒரு வயதினை நோக்கி செல்லுகின்ற இந்த இணைய தள வானொலி தன்னை விரிவுபடுத்தும் நோக்கில். ''இஸ்லாமிய'' நிகழ்ச்சியை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வை ''கொழும்பு தமிழ்ச் சங்கத்தில''; நடாத்தியது.

இந்த நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்பட்ட இறுவெட்டு தான். ''கல்லறையில் காதல்'' இளம் படைப்பாளியான கிருஷ்ணி ஜெயநாயகத்தின் எழுத்து வடிவில் உருவான இந்த வானொலி நாடகத்தை திரு. ஏ.எம்.கணேஷ் தயாரிக்க திரு. சோமு குணசீலன் இயக்கியுள்ளார். இந்த நாடகத்தின் பின்னணி இசையை திரு. கிருஷ்ணபிள்ளை துஷியந்தன் வழங்கியுள்ளார்.

கிராம புறத்தை மையமாக வைத்து அங்கு வாழ்கின்ற இளம் காதல் உள்ளங்களின் இடையே நிகழ்கின்ற சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் நாடக ஆசிரியர்.

சிறிய வயதில் இருந்து அந்த கிராமத்தில் இருக்கின்ற ''சஞ்சய்'' என்கின்ற இளைஞனை காதலிக்கின்றாள் சாந்தி. தொழில் தோடி ''லண்டன்'' செல்லுகின்ற காதலன் ''சஞ்சய்'' தாய் நாடு திரும்பும் வரை தனது காதலை கட்டி காத்திக்கின்ற காதலி சாந்தியின் உணர்வுகள் கிராமத்து காதலுக்கு ஒரு வெற்றி என்று சொல்லாம்.

இவர்கள் இருவர்க்கு இடையே இருப்பது. காதலா? அல்லது ஒரு தலைக் காதலா? ஏன நாடக ரசிகர்களை குழம்ப வைத்தாலும். குழப்பத்திற்க்கான தீர்வை நாடக இறுதியில் சொல்லும் உத்தி ''கிருஷ்ணி ஜெயநாயகத்தின்''; நாடக கலைக்கு இது ஒரு சான்று என்று சொல்லாம்.

மகனின் வரவுக்காய் காத்திருக்கும் பெற்றோரின் அன்பு ஒரு புறமாக இருக்க. காதலியின் எதிர்பார்ப்பு. ஒரு கிராமத்து காதல் எப்படியிருக்கும் என்பதை காதலி சாந்தியின் உணர்வான நடிப்பின் மூலம் அறியமுடிகின்றது.
லண்டனில் இருந்து வந்திருக்கும் காதலன் ''சஞ்சய்''யிடம் தனது காதலை சொல்ல தயங்கும் சாந்திக்கு. அவளின் தோழி கூறும் அறிவுரைக்கு சாந்தி சொல்லும் அந்த உணர்வான வரிகள். கிராமத்து காதலை விரும்பாதவரையும் விரும்ப வைக்கின்றது.

மகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் குடித்துக் கொண்டு திரியும் தந்தை எப்படியிருப்பார் என்பதை சாந்தியின் தந்தையாக இருக்கும் ''விருத்தாடசலம்'' என்கின்ற பாத்திரம் உணர்த்துகின்றது. கிராமத்து பொற்றோர் இடையே இடம்பெறும் ''செல்ல சண்டைகள்'' ரசிகர்களை ரசிக்க வைக்கின்ற போது. நினைவுக்கு வருகின்றார். ஏ.எம். ஜெயஜோதி அவர்கள். யாழ்ப்பாண சொல் வழக்கில் தாய்யாக அல்லது மனைவியாக நடிக்க கூடியவர் இவர். இவரின் சாயலில் ''அபிராமி யோகலிங்கத்தின் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது.

''சஞ்சய்'' தனது ''கேளி'' தனத்தால் தனது காதலியை இழப்பதும். அவசரப்பட்டு தனது வாழ்க்கையை முடித்து கொள்ளும் சாந்தியின் மரணமும் நாடக ரசிகர்களின் மனங்களை உருக வைக்கின்றது.

சஞ்சய்யின் நடிப்பு நன்றாக அமைந்தாலும். தேவையில்லாமல் ஆங்கில சொற் பிரயோகம் செய்வது எரிச்சலை தருகின்றது. அழகான தமிழ் நடையில் நாடகம் செல்லுகின்ற போது. ஆங்கிலத்தை உட்பிரயோகம் செய்வதை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நாடகம் ''தூள்'' என்று சொன்னாலும் இறுவெட்டு என்று பார்கின்ற போது சில தவறுகள் இருக்க தான் செய்கின்றன. உரையாடலை கேட்க்க முடியாமல் பின்னனி இசை மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருந்தாலும் இளம் படைப்பாளிகளின் முதல் முயற்சி என்பதால் அவர்களை பாரட்ட வேண்டும்.

எனவே ''கல்லறை காதல்''. சொல்ல மறந்த காதல் கதை என்று சொல்லாம்.

புது வருட வாழ்த்துக்கள்

எமது இனிய புது வருட வாழ்த்துக்கள்

தினக்குரலில் பூத்த வலைப்பூக்கள்

இலங்கையில் இருந்து வெளியாகும் தினக் குரல் பத்திரிகை. வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இது வரையும் வெளியான வலைப்பூக்களின் பதிவுகள்.



இந்த பூக்கள் மலர உரமாக இருக்கும். அன்பு உறவுகளுக்கு எனது நன்றிகள்.

இணைய தள வானொலியின் இறுவெட்டு வெளியீட்டு விழா புகைப்படங்கள்

தொடர்பான செய்தி முன்னர் தந்திருந்தேன். இறுவெட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இது.

மங்கள விளக்கேற்றும் காட்சி

தாரனி,மற்றும் தினேஸ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி





தமிழோசை குழுவினர்




படங்கள் - தாசன்

2007 ஆண்டுக்கான சிறந்த நடிகர்

இவர்கள் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி யார்என்று தான் பாரங்களேன்



தமிழோசை இணையதள வானொலியின் நிகழ்வில்

30-03-2008 அன்று. இலங்கை தமிழோசை வானொலியின் ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணமும் ‘’கல்லறையில் காதல் ‘’ இறுவெட்டு வெளியீட்டு விழாவும் இடம் பெற்றது.
காலை 10மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வை ‘’வானம்பாடி புகழ்’’ யோகராஜா தினேஸ்குமார்;‘’இளம் வானொலிக் குயில்’’ தாரானி லிங்கரெட்ணம் ஆகியோர் தொகுத்து வழங்க. மங்கள விளங்கிளை மத குருமார்கள் , பிரதம விருந்தினர்கள்கள் எற்றி வைக்க வரவேற்ப்புரையை ‘’பொப்பிசை திலகம்’’ திரு.இராமச்சந்திரன் நிகழ்த்தினார்.

சரியாக 11மணிக்கு ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணம் ‘’தமிழோசை இணைய தள வானொலியின்’’ முகாமைத்துப் பணிப்பாளர் திரு.எ. எம். ஜெசீம் தலமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் திரு.இமாம் அவர்களும், பா.உறுப்பினர் ‘’மக்களின் காவலன்’’ மனோகணேஸ்;, மற்றும் பிரமுகர்களும் இஸ்லாமிய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

சிறப்புரைகளை தொடர்ந்து . கிருஸ்ணி ஜெயநாயகம் அவர்களின் எழுத்து வடிவில் உருவான ‘’கல்லறையில் காதல்’’ என்னும் வானொலி நாடகத்தின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நாடகத்திற்க்கான பின்னனி இசையை கி.துசியந்தன் வழங்க. நாடகத்தினை சிறந்த முறையில் தயாரித்து வழங்கியுள்ளார் ‘’உங்கள் எ.எம். ஜெசீம்’’ அவர்கள். வெளிநாட்டில் இருந்து பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பொற்றோர்களின் மத்தியில் தனது காதல் நாயகனுக்காய் காத்திருக்கும் சாந்தியின் வாழ்வில் நிகழும் சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் கிருஸ்ணி அவர்கள்.

காத்திருக்கும் சாந்தியின் இறுதி முடிவு எப்படி அமைய போகின்றது. சாந்தி தனது காதல் நாயகனை கரம் பிடிக்க முடியுமா? கேட்டுதான் பார்ங்களேன்