2008 புது வருட வாழ்த்துக்கள்




உலமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது உறவுகளுக்கு. எமது இதயம் கனிந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்

டுபாயும் வெள்ளிக்கிழமையும்



வியாழக்கிழமையே வெள்ளிக்கிழமைக்கான கொண்டாட்டம் தொடங்கி விடும். மிக்சர் வாங்குவது, சோடா வாங்குவது, வீட்டுக்கு போன் பேசுவதற்கு காட் வாங்கிறது என்று ஒரே பரபரப்பு. மற்ற நாட்களை விட வியாழன் வித்தியாசமான நாள் தான்.

தங்கள் தொலைபேசிகளில் இருந்து தகவல் பறக்கும். அவர்கள் சந்திக்கபோவது அவர்களின் அண்ணாவாக இருக்கலாம். அல்லது தம்பியாக இருக்கலாம். இவர்களை விட இன்னும் பல பேரை சந்திக்கலாம். அந்தளவான பரபரப்புக்கு என்ன காரணம்?வெள்ளிக்கிழமை என்றால் டுபாயில் விடுமுறை நாள்.

நானும் அபிர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கம்பனில் வேலை செய்கின்றேன். போன புதிசில் ஒரு இடமும் போவது இல்லை. வேலையும் தங்கும் அறையுமாக இருந்தேன். கம்பனிக்கு பின்பக்கமாக அறையும் இருந்தது.
அன்று வியாழக்கிழமை அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவித்தல். ‘’தாசன் சனிக்கிழமை மெடிக்கலுக்கு போக வேண்டும்.’’ என்ற அறிவித்தல். தகவலை சுமந்து வந்த போமன் ‘’இரவுக்கு ஒன்றும் குடிக்க வேண்டாம்’’ என்று சிரித்தபடி கூறி விட்டு சென்றார். எனக்கும் ஒன்றும் புரிய வில்லை. ‘’மெடிக்கலுக்கும்’’ தண்ணீர் குடிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்? என்று எனது மனதுக்குள் யோசனை.

அன்று இரவு பக்கத்து அறையில் இருக்கும். தமிழ் நாட்டை சேர்ந்த நண்பர்கள் திடீர் என்று எங்கள் அறைக்கு வந்து. தங்கள் அறைக்கு வரும்படி அழைத்தார்கள். என்ன விடயம் என்று எனக்கு புரிய வில்லை. அவர்கள் அறைக்கு சென்றேன். சிரித்த படி எல்லோரும் வரவேற்றார்கள். மட்டன், சுக்கா, மிக்சர் என்று கோப்பையில் இருந்தது. எல்லோரும் வட்டமாக இருந்து வெட்டு. திடீர் என்று மோகன் அண்ணா. தன் இடுப்புக்குள் இருந்து எடுத்தார். வழமையாக இருப்பது போல் கத்தி இல்லை. அது எம்.சி என்னிடம் ‘’தாசனுக்கு என்ன மாதிரி தண்ணீரோ,அல்லது சோடாவோ?’’ என்ற கேட்டபோது எனக்கு ஒன்றும் புரிய வில்லை கூட்டத்தில் இருந்த போமனை பார்த்தேன். அவர் சிரித்த படி இனி இங்கு இருப்பது அழகு அல்ல என்று நினைத்தரோ என்னவோ? அறையை விட்டு வெளியேறினார். போனவர் திரும்பி வந்து “தாசன் சனிக்கிழமை மெடிக்கலுக்கு போக வேண்டும்.’’என்று மீண்டும் ஒரு முறை கூறும் போது தான் விளங்கி விட்டது. வெறும் சோடா மட்டும் கிடைத்தது. அன்று இரவு முழுவதும் ஆங்கிலம் கதைக்க தெரியாதவர்களும், ஹிந்தி, கதைக்க தெரியாதவர்களும் வடிவாக ஆங்கிலம், ஹிந்தி போசினார்கள்.வழமையாக மற்றவர்களை அதட்டும் போமனுக்கும் அன்டைக்கு சேர்த்து வைத்து நடந்தது. காரணம் போமனும் இவர்களின் நண்பராகி விடுவார்.

வெள்ளிக்கிழமையென்றால் அநேகமான நண்பர்கள் அறையில் இருப்பது இல்லை. காலையே ஊர் சுற்ற புறப்பட்டு விடுவார்கள். முன்னர் எல்லாம் அறையில் இருந்து சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் பாப்பார்கள். விசு வெளியேறியவுடன் அவர்களும் வெளியேற தொடக்கி விட்டார்கள்.நானும் அறையில் இருப்பது இல்லை.

காலை எழும்பி பல்லை துலக்கி போட்டு. பட்டும் படாமல் முகத்தை கழுவி போட்டு. மெல்ல நடத்து போகலாம் சயா குடிக்க என்று எண்ணியபடி வெளிக்கிட பக்கத்து அறையில் இருக்கும். மோகன் அண்ணா. தலையில் கையை வைத்து கொண்டு அறை வாசலில் இருந்தார். பயந்து விட்டேன். அவர் வீட்டில் ஏதாவது பிரச்சனையோ. அவசரம் என்றாலும் இந்த கம்பனியில் பாஸ் போட்டு உடனே தரமாட்டார்கள். ஊரில் இருந்து ஒருவர் உறுதிபடுத்த வேண்டும். அப்போது தான் பாஸ்போட் கிடைக்கும். அவரிடம் விசாரித்தேன். நீங்கள், நான் நினைப்பது மாதிரி ஒன்றும் இல்லை. நேற்று இரவு நிறைய குடித்தது. அதனால் “மண்டை குத்துவதாக” கூறினார். இரண்டு கிளாஸ் குடித்தால் போதும் என்றால். கேட்டிர்களா? என்றேன். “ஒரு சயா குடிக்க எல்லாம் சரியாகி விடும்.’’ என்றார் சிரித்த படி.

இருவரும் வழமையாக சாப்பிடும் கடைக்கு சென்றோம். இன்டைக்கு ஆக்கள் குறைவு. லீவு நாள் தானே எந்த நேரமும் வந்து சாப்பிடலாம். சிரித்த படி வரவேற்றார். பசீர் சேட்டா இவர்தான் இந்த கடையின் கணக்காளர். ஆனால் புதிதாக வருவோருக்கு அவர் தான் கடை உரிமையாளர் என்று நினைப்பார்கள். நானும் அப்படி தான் நினைத்தேன் போன புதுசில். அந்தளவுக்கு கடையின் நிர்வாகம் அவர் கையில். ‘’என்ன தாசன் சாப்பிட போறியள்”? என்றார்.‘’இன்டைக்கு ஒன்றும் வேண்டாம் சாயா மட்டும் குடிப்பம்’’ அப்ப தம்பி மத்தியனத்திற்கு என்ன ‘’மட்டன் புரியானியோ அல்லது சிக்கனோ?’’ என்றார் சேட்டா. ‘’சிக்கன் அனுப்புங்கோ.’’ என்று கூறி விட்டு. மேசையை பார்த்தேன் தினத்தந்தி, மலையாள பேப்பர். என கிடந்தது. ‘’என்ன சேட்டா வீரகேசரி,தினக்குரல் எடுக்க சொன்னான் எல்லோ?” என்றேன். ‘’ஒடர் குடுத்து இருக்கு வரும் தம்பி’’ என்றார். நான் பேப்பரை கேட்டது இப்போது தப்பாக போய் விட்டது. பக்கத்தில் இருந்த தங்கராஜ் அண்ணா மெல்ல கதையை தொடங்கினார். ‘’நீங்கள் யானைக்கு போட்டு இருந்தால் ஏன் இந்த பாடு? அவன் எல்லோ பாதையை திறந்து விட்டவன். தமிழ் சனக்கள் எவ்வளவு சந்தோசமாக இருந்ததுகள். இப்ப எல்லாம் செத்து போகுதுகள்’' என்றார். நான் மெல்ல கடையை விட்டு கிளம்பி விடடேன் இது சிக்கலான கேள்வி? தங்கராஜ் அண்ணா நன்கு படித்தவர் அல்ல. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனால் உலக விடயங்களை அறிந்து வைத்து இருப்பார். இன்றைக்கு நேற்று அல்ல இவர் இப்படி கேட்ப்பது . நான் வேலைக்கு போனதில் இருந்து. திடீர்,திடீரரென இப்படியான கேள்விகள் அவரின் வாயில் இருந்து முளைக்கும்.

நேரத்தை பாரத்தேன். காலை 7மணி பார் டுபாயிக்கு போக வேண்டும், சோனப்பூருக்கும் போக வேண்டும். அங்கு அப்பப்பாவின் சகோதரியின் மகன். முருகதாஸ் அண்ணா அங்கு இருக்கின்றார். தன்னிடம் வருவது இல்லை என்று முறைப்பாடு.’’ இலங்கையிலும்; அப்பாவிடம் முறைப்பாடு செய்து இருக்கிறார். எப்படியும் அவரிடம் போக வேண்டும். ‘’அதற்கு இடையில் கோவிலுக்கும் போக வேண்டும். அபிர் சந்திக்கு எல்லா பஸ்சும் வரும்.’’ பார் டுபாய் என்றால் 61, 63என்றால் சோனப்பூர், 64என்றால் தேரா டுபாய் இவையேல்லாம் போக வேண்டிய பஸ்களின் இலக்கம். தேரா டுபாயை பற்றி ஒரு ரகசியம் பின்னர் சொல்லுகின்றேன்.

61ம் இலக்க பஸ் வந்தது “இதிலை போனால் கோவிலுக்கும் பார் டுபாய்யிக்கும் போய் விட்டு, அப்படியே போட்டிலில் தேராவுக்கு போகலாம். தேராவில் இருந்து 63e எடுத்தால் சோனப்பூர் போகலாம்.’’ இது எனது பயணத்தின் ஏற்பாடு. என்னுடன் மாணிக்கம் அண்ணா வந்தார். அவரும் தமிழ் நாடு தான். ஆனால் அவர் கிறிஸ்தவர் எங்களுடன் பிள்ளையார் கோவில், கிருஸ்ணன் கோவில் என்று வருவார். அத்துடன் கோதைகளையும் பார்க்கதான்.

ஒழுங்கு முறையென்றால் டுபாய் தான். வரிசையாக தான் நின்று கோவிலுக்கு போக வேண்டும். எவ்வளவு மனதில் கஸ்டம் இருந்தாலும் கோவிலுக்கு போய்விட்டால் ஒரு நிம்மதி. எங்கள் ஊர் கோவில்களில் கண்பது போல் எதோ ஒரு சந்தோசம். சரசரக்கும் பட்டுபுடவையிடன் பெண்கள் கூட்டம், நாங்கள் தழிழ் பெண்கள் அழகு அல்ல என்று கூறினாலும். சக மொழி நண்பர்கள் அவர்களுக்கா காத்து இருப்பார்கள். குளிர்த்து விட்டு தலை மயிரை உலர விட்டபடி தலையில் மல்லிகை பூ வைத்து சுடிதார் போட்டு கொண்டு வரும் போது எப்படி எல்லாம் வர்ணிப்பார்கள். ‘’நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தனீர்கள்’’ என்று எங்களை பார்த்து கூறுவார்கள். அவர்களின் வர்ணிப்பு வைரமுத்துவின் காதல் கவிவரிகளே தோற்று விடும். அங்கு தான் ஒரு முறை புன்னகை இளவரசி சினோகாவையும் பார்த்தோம். அவரும் டுபாயில் தான் படித்தவராம் அடிக்கடி இக் கோவிலுக்கு வருவாராம்.

மசுதிக்கு பக்கத்தில் இருக்கும் இந்து ஆலயத்துக்குள் சென்று வரிசையாக நின்றபடி கோவிலுக்குள் நுழைந்தேன். உள்ளே பக்தர் கூட்டம். குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதற்கும், தமது இறந்த உறவினர்க்கு திதி கொடுப்பதற்க்கும், என்று ஒரே பரபரப்பு. எனக்கு ஊர் நினைவு வந்தது.

எனக்கு டுபாய்யில் வேலை செய்வதற்க்கு விசா கிடைத்தவுடன். நித்தி மாமாவும், மாமியும் எனக்கு தெரியாமல் கதைத்த விடயம் என் காதுக்கு எட்டியது. ‘’இவன் அங்கை போய் என்ன செய்ய போறான்? ஒழுங்க கதைக்க தெரியாது. அதுவும் முஸ்லிம் நாடு பிழை விட்டால் கோழிக்கு சுருக்கு போடுற மாதிரி போடுவாங்கள்.’’என்று நித்தி மாமா கூற கோயில் மாடு மாதிரி மாமி தான் அவரின் கருத்தை எற்பதாக தலையாட்டினார். இதை விட மனைவியின் சகோதரம் அனுப்பும் காசில் சிலவு செய்து கொண்டு. ஊர் மர நிழலில் இருந்து கொண்டு மண்டான் சுருட்டையும் ஊறிஞ்சி கொண்டு ஊர் புதினம் பேசும் ஒருவர். ‘’அவன் உமாபதியே சொன்னவன் சவுதியில் எவ்வளவு கஸ்டம் என்று. நீ போய் என்ன செய்ய போறாய்?’’ என்றார் நான் கொடுப்புக்குள் சிரித்தேன் அம்மன் கோவில் நல்ல தண்ணீர் கிணற்றில் இருந்து சைக்கில் பாரில் தண்ணீர் குடம் வைத்து ஒட தெரியமல். பக்கத்து வீட்டு பெடியனுக்கு ஐந்து ரூபா காசு கூடுத்து தண்ணீர் எடுக்கும் இந்த பெரியவர்க்கு பதில்சொல்ல நான் விரும்ப வில்லை.

ஆனால் எனக்கு மனத்தில் சிறிய பயம். வீட்டில் இருக்கும் போது. காலையில் குளிர்த்து விட்டு ஊற்று வினாயகர் கோவிலுக்கு போய் வணங்கி விட்டு தான் காலை சாப்பாடோ அல்லது அடுத்த வேலையோ நடக்கும். இது நான் இல்லை என் சக தோழர்களும் அப்படிதான். இவர்கள் சொன்ன பீதி கதையால் அம்மா தந்த வற்றாப்பளை அம்மன் கோவில் விபூதி பக்கற்யையும், காச்சல் வந்த போது பிள்ளையார் கோவிலில் மயில் ஐயா மந்;திரம் சொல்லி. கையில் கட்டி விட்ட நூலையும் கழட்டி கொழும்பில் உள்ள மாமா வீட்டை வைத்து விட்டு கையில் இருந்த மோதிரத்தையும் கழட்டி அப்பாவின் கையில் கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.

பிரசாதம் என்று கூறி பஞ்சாபி ஒருவர் விபூதியை கொடுத்து கொண்டு இருந்தார். ஒடி சென்று இரண்டு கைகளில் நிறைய விபூதியை வாங்கி கொண்டேன். படிக்கும் போது சைவ சமயம் படிப்பித்த மகாலிங்கம் சேர் சொல்லி தந்தது போல். விபூதியை வலது கையால் தொட்டு தலையை உயர்த்தி மேலே பார்த்து கொண்டு சிவ, சிவ, சிவ என்று மனதுக்குள் சொல்லி. நினைவுக்கு வந்த ஊர் கோவில்கள் எல்லத்தையும் நினைத்து ஆசை தீர விபூதியை பூசினேன்.

பூசை முடித்து வெளியே செல்ல வேண்டுமாயின். அன்னதான அறைக்கு சென்று தான் வெளியே செல்ல வேண்டும். ஆகவே எல்லோரும் சாப்பிட வேண்டும். பாண் கடலை கறி, பொங்கல், இப்படி கிடைக்கும். எங்கள் ஊர் கோயில் திருவிழா காலங்களில் அன்னதானத்தில் சில வேனையில் சண்டை கூட வரும். அன்னதானம் கொடுப்போர் சில வேளைகளில் கோபம் அடைந்து அடித்தும் இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் நேர்த்தி சிறந்த முறையில் அமைந்தா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு புரியாத மொழிகளுடன் அன்புடன் அவர்களுக்கு உபசரிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. சிரித்த முகத்துடன் உணவை பரிமாறுவார்கள். பஞ்சாபி பெண் ஒருத்தி சிரித்த முகத்துடன் தந்த இரண்டு துண்டு பாணும் கடலை கறியையும் வாங்கி கொண்டு கடற்கரையில் நின்றபடி சாப்பிட்டேன். கண்களில் கண்ணீர் துளிகள் பரோட்டாவும் மட்டனும் சாப்பிட்டு ருசி கெட்ட வாய்க்கு. அம்மாவின் கையால் சாப்பிடுவது போல் இருந்தது.

நேரத்தை பார்தேன் மாலை 6மணி. எனது தொலைபேசி சத்தம் போட்டது. எதிர் முனையில் அறை நண்பன் குமார். வரும் போது வசந்தபவானில் இரண்டு பொங்கல் பார்சல் வாங்கி கொண்டு வர சொன்னான். வசந்த பவானில் பார்சலுக்கு ஒடர் கொடுத்து விட்டு நானும் சாப்பிடுவதற்க்கும் மேசையில் தட்டு வந்தது. கூடவே இரண்டு முள்ளு கரண்டி. கரண்டியுடன் நான் ஒரு போரட்டமே நடத்தினேன். முடியவில்லை. இப்படி சாப்பிட்டால் பொங்களின் ருசியும் போய் விடும். என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு கையால் விளையாட தொடங்கினேன். கவுடரில் இருந்த கந்தசாமி அண்ணா சிரித்தார். அவருக்கு எனது சிரிப்பின் மூலம் எனது பதிலை சொன்னேன். கை ருசி என்பது சொல்லவா வேண்டும். அம்மா நிலாவை காட்டி கைளால் ஊட்டி விட்ட நினைவுகள் எதிர் சுவரில் தொங்கிய நடிகை நிலாவின் படத்தை பார்த்து கொண்டு எங்கள் வீட்டு நிலாவை எப்போது பார்ப்பேன்? என்ற நினைவுடன் சாப்பிட தொடங்கினேன்.

கதிர்காமம் ஆலயத்தின் காட்சிகள்

அண்மையில் இலங்கையில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கதிர்காமம் ஆலயத்திற்க்கு சென்ற போது. எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு....

ஆலயத்தின் முன் தோற்றம்

செல்லக் கதிர்காமத்தின் ஆலயத்தின் அருகே ஓடும் அருவி


சல சலக்கும் அருவியின் மகிழ்வில்

அருவியை பார்த்து கொண்டு இருக்கலாம்

உச்சி மலையில் இருக்கும் கோயில்.



உச்சி மலைக்கு செல்லும் பாதை

படம்,தகவல்- தாசன்

''மனோலயம்'' நூல் வெளியீட்டு விழாவின் படங்கள்

அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற ''மனோலயம்'' நூல் வெளியீட்டு விழாவின் படங்கள்
உடுவை எஸ்.தில்லைநடராசா நூலினை வெளியீட்டு வைக்கின்றார்.


நிகழ்வி்ல் கம்பவரிதி ஜெயராஜ், அருணா செல்லத்துரை.


அருணா செல்லத்துரை உரை நிகழ்த்துகின்றார்

நிகழ்வில் கலந்து கொண்டோர்


படங்கள்,தகவல்-தாசன்


குருக்கள் அவர்கள் சிறப்புப்பிரதி பெறுகின்றார்





நூல் ஆசிரியர் உரை நிகழ்த்துகின்றார்

''மனோலயம்''பாசத்திற்க்கு ஒரு நூல்


உடுவை எஸ்.தில்லைநடராசா,கம்பவரிதி ஜெயராஜ்.மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் உரை நிகழ்த்துகின்றார்.






1989ம் ஆண்டு கடைசி என்று நினைக்கின்றேன். 8வகுப்பில் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.ஒரு நாள் மாணவர்களுக்கு மகிழ்சியான செய்தி அதிபர் திரு.சிவபாத சுந்தரம் அவர்கள் ஒய்வு பெற்று செல்லுகின்றார் என்ற செய்தி. என்னும் சில ஆசிரியர்களின் வயதை நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்த காலம் அது. என் என்றால் அவர்களும் எப்போது ஒய்வு பெறுவார்கள் என்பதற்காக தான். அந்த அளவுக்கு அடி. உடற்பயிற்சி சேர் (உப அதிபர்), அதிபர் திரு. சிவபாத சுந்தரம், திரு.அம்பாலவாணர் சேர் (தற்போது கரவெட்டி கோட்ட கல்வி அலுவலர்) இவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தால் போதும் எல்லா மாணவர் அமைதியாகி விடுவார்கள். எந்த வகுப்பு மாணவர்கள் பிழை விட்டாலும் மேற் குறிப்பிட்டவர்களிடமே அனுப்புவார்கள். அவர்கள் இறுதி தண்டனை வழங்குவார்கள். அவர்களின் அடியை விட அவர்களின் பேச்சை(திட்டு) தாங்க முடியாது. என் என்றால் கூடுதலான மாணவர்களின் பெற்றோர்கள் அந்த கல்லூரியில் கல்வி கற்று இருந்தரர்கள். அவர்களுக்கு படிப்பித்த பெருமை உப அதிபருக்கும் , அதிபருக்கும் சாரும் எனவே யார் ? யாருடைய பிள்ளை என்று அறிந்து இருப்பார்கள.; அதனால் விசேடமான பூசை எங்களுக்கு வழங்கப்படும். காலையில் கூட்டு பிரத்தனையின் போது தேவாரம் முடிய நாங்கள் இறுதியாக கடவுளிடம் வேண்டுவது. அந்த ஆசிரியர் இன்டைக்கு வரக் கூடாது. இந்த ஆசிரியர் நானைக்கு வரக்கூடாது என்று.

அன்று அதிபர் திரு.சிவபாதசுந்தரம் அவர்களின் பிரியா விடை நிகழ்வும், புதிய அதிபரின் வரவேற்பு நிகழ்வும், அன்றுதான் அதிபரின் பிரிவை தாங்க முடியாது அழுதோம்.(உண்மையாக நம்பினால் நம்புங்கோ) புதிய அதிபரும் கல்லூரியின் பழைய மாணவன்தான். திரு.வை. செல்வராசா (தற்போது வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர்) இறுதியாக அதிபர் திரு.சிவபாத சுந்தரம் அவர்கள் எம் முன்னே உரையாற்றிய போது பல பழைய மாணவர்களின் பெயர்களை கூறிப்பிட்டு அவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்கள் என்றும் கூறினார்.


அண்மையில் எனது மாமாவின் வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. பொதியை உடைக்கும் உரிமையை (நூல்கள் மட்டும்) எனக்கு தந்தார் மாமா. நூலின் பெயர் “மனோலயம்” எழுதியவர் வீ.ஏ.திருஞானசுந்தரம். என்ன நூல் இது? யார் இவர்கள்? என்று மாமாவை குடைகின்றேன். இலங்கை வானொலியின் புகழ் பெற்ற கலைஞர்கள் , கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர்கள். என்ற தரவை தந்து விட்டு அவர் கோவையில் மூழ்கினார்.

நான் ‘’மனோலயம்” நூலில் மூழ்கின்றேன். இது ஒரு பாசத்திற்க்கான நூல். தம்பியை பற்றி அண்ணா எழுதும் ஒவ்வொரு வரிகளும் வாசகனை உருக வைக்கும். (இதை தான் ஒரே இரத்தம் என்பார்களோ) முதலில் யார் இந்த அண்ணா?இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் முதல் தமிழ் பிரதிப்பணிப்பாளர் என்ற பெருமைக்கு உரிய திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் தான் இந்த நூலின் ஆசிரியர். பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்த பெருமை இவருக்கு சாரும் இதனை விட தமிழன் என்பதால் சிலருக்கு கிடைக்காது இருந்த பதவிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைக்க வழி சமைத்தவார்.

இப்படியும் ஒரு பாசமா?இது எனக்குள் எழுந்த கேள்வி இந்த நூலை வாசிக்கும் போது “வானத்தை போல” என்ற படம் பார்த்த ஞாபகம் வந்தது. ஆனால் நான் இங்கு இப்போது நியத்தில் “வானத்தை போல” ஒரு குடும்பத்தை பார்க்கின்றேன். இந்த குடும்பமே கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் வாரிசுகள்.

திருஞானசுந்தரம் அவர்களுக்கு ஒரு அண்ணா அவர்தான் திரு.வீ.ஏ.சிவஞானம். இலங்கையின் “அன்னை” வானொலி என அழைக்கப்படுகின்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை பிரபலமடைய செய்த கலைஞர்கள் வரிசையில் திரு.சிவஞானம் அவர்களின் பங்கு முக்கிய இடத்தை பெறுகின்றது. கிராமிய கலையை வளர்த்து எடுப்பதற்க்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். இவரின் நினைவாக ‘’சிவலயம்”
என்ற நூல் கடந்த ஆண்டு திருஞானசுந்தரத்தால் வெளியிடப்பட்டது.இதோ தம்பியின் நினைவாய் ‘’மனோலயம்’’ தம்பி மனோரஞ்சிதன் ஆரம்பத்தில் ஒவிய துறையில் அதிக ஈடுபாடு காட்டியதன் மூலம் இன்று அவரின் ஒவியங்கள் நிலைத்து நிற்கின்றது. மனோவும் வானொலி துறையில் செயற்பட்டு வந்துள்ளார். தனது திறமைகளை வேகமாக வெளிக்கொண்டு வந்தவேளையில் இளம் வயதில் காலமாகி விட்டார். அனால் அவர்ரின் ஒவியங்கள் காலத்தால் அழியமல் அண்ணா என்னும் கோயிலால் நிற்கின்றது.


விக்கினேஸ்வார கல்லூரியில் சிலர் கல்வி கற்றதால் அந்த சில பேரால் கல்லூரிக்கு பெருமை என்று நாங்கள் கூறினாலும். அந்த கல்லூரியில்நாம் கல்வி கற்றதால் நாங்கள் பெருமை அடைகின்றோம் என்று கூறுகின்றார் பேராசிரியர் திரு.சிவத்தம்பி அவர்கள். இவர் ‘’மனோலயம்’’ நூலில் “அழியா இளமை” என்ற தலைப்பில் எழுதிய குறிப்பில் இருந்து சிறிய பகுதியை தருகின்றேன்.

இந்த நூலைப் புரட்டிப்பார்க்கும் பொழுது தான் விடயம் தெரியவருகிறது. சிறுவனாகவே கொழும்புக்கு வந்த மனோரஞ்சிதன் ஏறத்தாழ 1962-1970 காலப்பகுதியில் தன் கலையிருப்பை பதிவு செய்தார் அந்த கால கட்டத்தில் குறிப்பாக 1967முதல் 1970களில் நான் வெளிநாட்டிலிருந்தேன். 1970 இலேதான் மனோரஞ்சிதனின் வாழ்க்கை முற்றிளும் எதிர்பாராத வகையில் முடிவுற்றது.

ஏறத்தாழ 37 வருடங்களின் பின்னர் வெளிவருகின்ற இந்த நூல் மனோரஞ்சிதனின் ஒவியத்துறை ஆற்றiலையும், குறிப்பாக, கார்ட்டூன் சித்திரத்துரையில் அவருக்குள்ள வரலாற்று முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்துகின்றது. என குறிப்பிடுகின்றார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இந்த நூலில் மனோரஞ்சிதனின் ஒவியங்கள், சிறுகதை, என்பன இடம் பெற்றுள்ள. இந்த நூலின் இறுதியில். “காற்றைக் கருவி கொண்டு கலைபடைத்த வித்தகர்கள்” என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,அறிவிப்பாளர்கள் என 48 பேர்ருடைய படங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மொத்ததில் இந்த நூல் அரிய பொக்கிசம் என்பதில் ஜயம் இல்லை.

வாழ்த்துக்கள்



தீபத் திருநாளாம் தீபாவளியை கொண்டாடிக் கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாணத்தில் உலகசாதனை

இலங்கை யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஒன்பது மணித்தியாலங்கள் பேசி உலக சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.

உலக சாதனை வரலாற்றில் முதன் முதலாக தேவஸ்தான வளர்ச்சி நிதிக்காக நிகழ்த்தப்பட்ட உலகசாதனை இதுவாகும். வடமராட்சி அருட்பதி அல்வாய் கோயில் தோட்டம் “சிறி ஜெகதீஸ்வரம் தேவஸ்தானம்” திருப்பபணி நிதிக்காக இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

திரு.அழகு ஜெகதீஸ்வர தேசிகர் என்பவரே உலக சாதனை படைத்தவர் ஆவார்.

“மகாபாரதம்’’ என்னும் பொருளில் கடந்த 01-10-2007 அன்று காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை தொடர்ச்சியாக பேசி இச் சாதனையைப் படைத்துள்ளார்.


இச் சாதனை நிகழ்வுக்கு நடுவர்களாக திரு.தங்கமயில், செல்வி சுகுணா, டாக்டர் கதிரவேற்பிள்ளை, பண்டிதர் எஸ். வேலாயுதம், அதிபர் கி. நடராஜா, அதிபர் சிவநாதன்,ஆகியோர் கடமையாற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையில் கியூபா ஜனாதிபதி பிடல் கஸ்ட்றோ 4-அரை மணித்தியாலம் பேசி நிகழ்த்திய உலக சாதனையை 2002ம் ஆண்டு எமது நாட்டு கலைஞர் திரு.சோக்கல்லோ சண்முகம் அவர்கள் “இலக்கிய நயம்” என்னும் பொருளில் 7-அரை மணித்தியாலங்கள் பேசி முறியடித்தார். இச் சாதனையை இப்போது 9மணித்தியாலங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நன்றி
வீரகேசரி(வார மலர்)
14-10-2007

ஒரே மேடையில் 8நூல்கள் வெளியீடு



தமிழ்நாட்டில் கவிஞர் பா.விஐய் எழுதிய 10நூல்கள் கவிஞர் கருணாநிதி அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் விடயம் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விடயமாகும்.

ஆனால் இலங்கையில் இப்போது நிலவுகின்ற இறுக்கமான நிலமையில் ஒரு புத்தகம் வெளியிடுவது என்றால் மிகவும் கஷ்டமான விடயமாகும். ஆனால் ஒரே மேடையில் 8நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிக்குப்பு மையமும், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முத்தமிழ் மன்றமும் இணைத்து நடாத்திய ஓ.கே.குணநாதன் எழுதிய 8நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23-10-2007 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.


ஓ.கே.குணநாதன் எழுதிய

1) பிஞ்சுக் கால்கள்-(சிறுவர் கதை)

2)அம்மா – (சிறுவர் கதை)

3)சங்கருக்கு பிறந்தநாள்-(சிறுவர் கதை)

4)tender leg –(சிறுவர் கதை)

5)ஐயோ! காடு எரியுது....!-(சிறுவர் கதை)

6)குயில் அம்மா –(சிறுவர் கதை)

7)நாளைய தீனி- (சிறுகதைத் தொகுப்பு)

8)ஆடித்தீ –( நாவல்)

என்ற 8நூல்களும் எழுத்தாளரும் சக வலைப் பதிவாளருமான உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.




வினோதமான ஒலி உங்களுக்கு வருகின்றதா? வெந்தயம் சாப்பிடுங்கோ!

அன்பான உறவுகளே. நான், நீங்கள் எல்லாம் அம்மாவின் கையால் சாப்பிட்டு எத்தனை வருடங்கள். அம்மா பார்த்து பார்த்து சமைத்த சாப்பாட்டின் சுவை சொல்லவா வேண்டும்.

அக்காமாரே நான் உங்களை குறை சொல்ல வில்லை. நீங்கள் உங்கள் கணவர்மார்க்கு சமைத்து போடுவது “அமுதம்’’

என்டாலும் பார்ருங்கோ வீட்டு சாப்பாட்டை விட கடை சாப்பாடு தான் கூட நாங்கள் சாப்பிடுகின்றோம். இதற்கு அப்பால் அம்மாவின் சாப்பாடு போல் மனைவியின் கையால் சாப்பிடுவோர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இப்போது எல்லாம் நேரத்துக்கு எற்ற வகையில் தான் சாப்பாடு. நாங்கள் காலமை வெள்ளவத்தையில் பஸ்சால் இறக்கினால் இராமகிருஸ்ணாவில் ஒரு வெட்டு. மதியம் பம்பலப்பிட்டியில் சரஸ்வதி கோட்டலில் வெட்டு இப்படி வெட்டு வெட்டு என்டு வெட்டி கடைசியாக கொட்டுகிறது. நாங்கள் இருக்கின்ற வீட்டை தானே.

வயறு குடைய குடைய போய் எத்தனை மணி நேரமும் இருந்தாலும் சரி வராது. வினோதமான ஒலிகள் மட்டும் வரும். இது எங்கே எப்போது என்று சொல்ல முடியாது. இது நாம் வேலை செய்யும் இடங்களில் கூட நிகழ்ந்து விடுகின்றன.


எமது சாப்பாட்டால் தான் இப்படி தோன்றுகின்றது. அதற்க்கு நாங்கள் சாப்பிடமல் இருக்க முடியுமா? என்று நீங்கள் கூற முனைவது தெரிகின்றது. அது தான் உங்களுக்கு ஒரு கை வைத்தியம் சொல்லுகின்றேன். கோபிக்க வேண்டாம் சிவபொருமானுக்கு முருகன் உபதேசம் செய்தவர் தானே என்னுடைய அலோசனையையும் கேளுங்கோ.

தேவையான பொருட்ங்கள்

1) ஒரு கிளாஸ்லில் சுத்தமான நீர்ரை எடுத்தல்
2) துப்பரவான வெந்தயம் (உங்களுக்கு தேவையான அளவு)

செய்முறை

1)இரவில் நீங்கள் நிந்திரைக்கு போகும் போது. உங்களுக்கு தேவையான வெந்தயத்தை எடுத்து. சுத்தமாக உள்ள கிளாஸ்லில் போட்டு அதற்க்கு மேல் நீரை விட்டு கிளாஸ்சை மூடி வைக்கவும்.

3) காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு. கிளாஸ்சில் உள்ள வெந்தயத்தை எடுத்து “சப்பி” சாப்பிடவும். பின்னர் குளிர்ந்த நீரினை எடுத்து போதியளவு குடியுங்கள்.

4) 1மணி நேரம் பொறுத்து காத்திருங்கள். பின்னர் சென்று இருந்து பார்ருங்கள் எல்லாம் சுகமாக போகும். உடம்பும் உற்சாகமாக இருக்கும்.

''அண்ணை றைற்"


கனடாவில்லிருந்து(குரு அரவிந்தன்)
சென்ற ஞாயிற்றுக்கிழமை, அக்ரோபர் மாதம் 2007, 7ம்திகதி கனடிய தமிழ் கலைஞர்கள் கழகம், பாரதி புரடக்ஷனின் ஏற்பாட்டில் கே. எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா, கனடா ஒன்ராரியோ ரொறன்ரோவில் உள்ள ஏஜியன்கோட் சனசமுக நிலையத்தில் மாலை 5:30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதைத் தொடர்ந்து கனடிய தேசியகீதமும் இடம் பெற்றன. ஒரு நிமிட மௌம் அஞ்சலி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் நிகழ்ச்சிகளை சிறந்த நடிகரும், கலைஞருமான துசி ஞானப்பிரகாசம் மிகவும் சிறப்பாகக் கொண்டுநடத்தினார்.
பாரதி கலைக்கோயில் அதிபரும், பிரபல நடிகர், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ். மதிவாசன் ஆரம்ப உரை நிகழ்த்தும்போது, இலங்கை வானொலியில் தன் குரல் வளத்தால் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை உருவாக்கிய கே.எஸ். பாலச்சந்திரன்தான் தன்னையும் கலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றும், இன்று இந்த இறுவட்டு வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டு, பாலா அண்ணாவிற்குப் புகழாரம் சூட்டிப் பாராட்டினார். தொடர்ந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், மேற்குலக நாடுகளில் உள்ளது போன்ற தனிமனித நடிப்புக் கலையை முதன்முதலாக தமிழ் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும், கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடக, திரைப்படத்துறையில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும் தனது வாழ்த்துரையில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தலைமை உரையாற்றிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எங்கோ பிறந்திருந்தால் இன்று எங்கேயோ போயிருப்பார் என்று ஒரு உண்மையான, சிறந்த கலைஞனைப் பாராட்டத் தயங்கும் எங்கள் தமிழ் சமுதாயத்தின் குறைபாட்டை மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டினார். மேலும் நகைச்சுவை வாய்மொழியாயும், உடல்மொழியாயும் வெளியே வரும்போது அது காலத்தால் அழியாமல் நின்றுவிடுகிறது. என். எஸ். கிருஸ்னனின் நகைச்சுவைகள் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனின் நகைச்சுவையும் எல்லோர் மனதிலும் பல ஆண்டுகளின் பின்பும் நிலைத்து நிற்கின்றது என்பதையும், எல்லாவற்ருக்கும் மேலாக அவரை ஒரு உயர்ந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதராக மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ரூபவாகினி தமிழ்துறை பணிப்பாளரும், இலங்கை வானோலி தமிழ் நாடகத் தயாரிப்பாளரும், கனடா ரீவிஐ பணிப்பாளருமான ப. விக்னேஸ்வரன் காங்கேயன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி. வைரமுத்துவைப் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிப்புத்துறையில் வெகுஜன அங்கீகாரம் பெற்ற மிகச்சில ஈழத்தமிழ் கலைஞர்களில் ஒருவர் என்றும், எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்ட கலைஞர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

வெளியீட்டு உரை நிகழ்த்திய கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள், தொல்காப்பியத்திலே எட்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவை நகைச்சுவை என்றும், அந்தச்சுவை கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கைவந்த கலை என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த இந்த இறுவட்டில் ஓடலி ராசையா, தியேட்டரில் மூத்ததம்பி, உகண்டா வானெலிச் செய்திகள், சப்ளையர் சத்தியமூர்த்தி, ''அண்ணை றைற்'' ஆகிய தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பதியப்பட்டு இருப்பதாகவும், தன்னை அதிகம் கவர்ந்தது உகண்டா வானொலிச் செய்திகள்தான் என்றும் குறிப்பிட்டு இறுவட்டை வெளியீடு செய்துவைத்தார்.


சி.ரி.பி.சி வானொலி அதிபரும், சிறந்த நாடக நடிகருமான இளையபாரதி அவர்கள் பல வருடங்களாகவே கே.எஸ்.பாலச்சந்திரனைத் தனக்குத் தெரியும் என்றும், சிறு பையனாக இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருவிழாவில் அவரைப்பற்றி உரையாற்றுவதற்கு தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டு, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.



ஜேர்மனியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் அனுப்பி வைத்த வாழ்த்துக் கவிதையை நடிகரும், நகைச்சுவை எழுத்தாளருமான கதிர் துரைசிங்கமும், அமெரிக்காவில் இருந்து கே.எஸ்.பாலச்சந்திரனின் நண்பர் சியாட்டில் மகேந்திரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசன் அவர்களும் வாசித்து அவரைப் பாராட்டினார்கள்.


ஆசியுரை வழங்கிய திரு. விஜயகுமாரக்குருக்களும், தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எஸ். அச்சுதனும் தமிழ் மக்களிடையே அதிகம் செல்வாக்குப் பெற்ற நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினர். தொடர்ந்து இறுவட்டுப் பிரதிகள் வெளியிடப்பட்டன. ஏற்புரையில் கே. எஸ். பாலச்சந்திரன் இந்த விழா சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.


குறிப்பாக மதிவாசன், ரஜீவிகரன், விக்னேஸ்வரன், ராஜ் சுப்பராயன், டிஜிமீடியா கருணா, மிடி மெலோடிஸ் எஸ் வி. வர்மன், துசி ஞானப்பிரகாசம், றெமி காந்தன், அவுஸ்திரேலியா கானப்பிரபா ஆகியோரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.



சின்னவயதிலே இலங்கை வானொலி மூலம் கே.எஸ்.பாலச்சந்திரனின் ரசிகனாக நானிருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அவரோடு பழகுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம்கிடைத்தது. 1997ல் "தமிழ் ஆரம்"என்ற சிறுவர்களுக்கான ஒளிநாடாவை நான் வெளியிட முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது கலையகத்திற்குச் தற்செயலாக வந்த அவர் அதைப் பார்த்துவிட்டு தன்னை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறை உங்களை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கும் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.




அதன் பின்பு இலக்கியச் சந்திப்ப்புகளில் அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடுவேன். நல்ல ஞாபக சக்தியும், ஆழ்ந்த நாவல் இலக்கிய அறிவும் அவரிடம் இருப்பதை அச்சந்தர்ப்பங்களில் அவதானித்தேன். அவரிடம் உள்ள திறமைகளையும், அனுபவங்களையும் நாடகப் பட்டறை மூலம் வெளிக் கொண்டுவந்து, அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது தற்போதைய ஆசை. அது மற்றவர்களின் ஆசையாகவும் இருக்கக்கூடும்!

செவிக்கு விருந்து தரும் அண்ணை றைற் போன்ற இறுவட்டு, பல நல்ல மனம் கொண்ட நண்பர்களின் உதவியால் இன்று வெளிவந்திருப்பதைப் போல, கண்ணுக்கு விருந்தளிக்கும் காணொளி ஒளிவட்டுக்களும் அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தாங்கி விரைவில் வெளிவர ஆவன செய்யவேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக ரீ.வீ.ஐயில் காண்பிக்கப்படும் வைத்திலிங்கம்சோ போன்ற நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஒளிவட்டு வெளிவந்தால் சர்வதேசத்திலும் பரந்து வாழும் தமிழர்களை அது மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. புகழ் பெற்ற நல்ல கலைஞர்களை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்டட கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. எமது இனத்தவரை, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை, நாமே முன்னின்று பாராட்டத் தயங்கினால் வேறுயாரும் பாராட்ட முன்வரப் போவதில்லை. பாலா அண்ணா நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தனது நகைச்சுவை நடிப்பு மூலம் எங்களை மகிழ்விக்க வேண்டும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் நூல் வெளியிட்டு விழா


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நூல்கள் இது வரையும் தமிழ் மொழியில் வெளி வரவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்தால் 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட இப்பாடத்திற்க்கு இவ் ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பாரிய பொறுப்பை யார் நிறைவேற்ற போகின்றார்கள் என்ற கேள்வி எழுந்து இருந்த வேளையில் அதற்க்கு முற்று புள்ளி வைத்திருக்கின்றார் ஆசிரியர் கே.ஆர்.சுகுமார் அவர்கள்.

கடந்த 06-10-2007 அன்று வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் சைவ புலவர் சு.செல்லத்துரையின் தலைமையில் இடம் பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில். முதற் பிரதியை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ்.தில்லை நடராசா அவர்கள் வெளியிட்டு வைக்க தினக்குரலின் அதிபர் திரு.எஸ்.பி.சாமி அவர்கள் பொற்று கொண்டார்.

முதன்மை விருந்தினராக பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் அவர்களும் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். நூலின் நயப்புரையை இலங்கை ரூபவாகினி கூட்டுதாபனத்தின் “ஐ” அலைவரிசையின் ஆலோசகரும். விஞ்ஞான தொழில் நூட்ப அமைச்சின் தகவல் தொழில் நுட்ப்ப ஆலோசகருமான திரு.யோகராஜ் நிகழ்த்தினர்.

2006ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பாடத்திற்கான முதலாவது பரீட்சை இந்த ஆண்டு (2007) மார்கழியில் நடை பெறவுள்ளது. எனவே தமிழ் மொழியில் ஒரு நூல் வரவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து சுகுமார் அவர்கள் இன் நூலை வெளி கொண்டு வந்திருக்கின்றார்.

இது வரைகாலமும் கணனி கற்கின்ற மாணவர்களுக்கு தமிழில் ஒரு நூல் வெளி வராதது பெரும்குறைபாடக இருந்தது. அனால் இன்று தமிழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப்பம் என்ற நூல் வெளி வந்தது மிகவும் மகிழ்ச்சியான விடயம்மாகும்.

இந்த நூல் எழுதுவதற்க்கு கூடிய தகவல்களை கூறிகிய காலத்திற்க்குள் திரட்டியிருப்பது. நூலை வாசிக்கும் போது புரிகின்றது. பரீட்சையில் ஈடுபட போகின்ற மாணவர்களுக்கு நூல் பயன் பெற வேண்டும் என்ற நோக்குடன். மிகவும் கடினமான உழைப்பினால் இந்த நூலை வெளிக் கொண்டு வந்துள்ளார். நூலின் ஆசிரியர்.

இன்னும்மொர் விடயத்தை இங்கு கூறிப்பிட வேண்டும். விழா மேடையில் வைத்து 400நூல் பிரதிகள் மாணவர்களுக்கு அன்பளிப்புக்கு உறுதுனை வழங்கிய தொழில் அதிபர்களையும், இன் நூல் வெளி வர உழைத்த உள்ளங்களையும் பாரட்ட வேண்டும்.

வெளியீடு
கே.ஆர்.சுகுமார்
கணனிப்பிரிவு
கொக்குவில் இந்து கல்லூரி

விலை- 350.ரூபா (இலங்கை)

மல்லிகையின் 43வது ஆண்டு மலருக்கு ஆக்கங்கள் கோரல்



இலங்கையில் இருந்து வெளிவருகின்ற மல்லிகை சஞ்சிகை
தனது 43வது ஆண்டு மலரை வெளியிடவுள்ளது.

இம் மலருக்கான வேலைகள் ஆரம்மாகியுள்ளது.

இம்மலருக்குபடைப்புகளை அனுப்ப விரும்புவோர் வெகு விரைவாக அனுப்பி
வைக்குமாறு மல்லிகை ஆசிரியர் கேட்டுள்ளார்.

அனுப்ப வேண்டிய முகவரி

201-4 sri kathiresan st
colombo-13
sri lanka

தொலைபேசி
0094112320721

இனையதள முகவரி
mallikaijeeva@yahoo.com

கனடாவில் ''அண்ணை றைற்''




உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

இலங்கையின் முதலாவது தமிழ் தனி நடிப்பு அண்ணை றைற்" இவ்வாண்டு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதே வேளையில் 2006ம் ஆண்டுடன் கே.எஸ் பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து 40ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதியன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்.ஆறாம் இலக்க கலையகத்தில் பார்வையாளர்களுக்கு முன்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "கும்மாளம்" நிகழ்ச்சியில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலும் பல மேடைகளிலும்இ 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின் போதும் அரங்கேறியது.

ஒலிப்பதிவு நாடவாக உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் வீடுகள் எல்லாம் சென்றடைந்த " அண்ணை றைற்"அதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் நேரடியாக மேடையேறியது.

1989ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும் சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரிலும் கே. எஸ். பாலச்சந்திரன் நேரில் தோன்றி " அண்ணை றைற்" நகைச்சுவை விருந்தளித்தார்.

34 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய ஒலித்தட்டாக வெளி வருகிறது.

‘’அண்ணை றைற்’’ கலை துறையில் நாற்பது வருடங்கள்



சுமார் பத்து வருடங்களுக்கு முன். வயறு குழுங்க குழுங்க சிரித்து நாடங்களை ரசித்த இனிமை இப்போது உண்டா? என்று நோக்கும் போது. அவை இப்போது மறைத்து போய் கொண்டு இருக்கின்றது என்றும் கூறலாம்.

இதற்க்கான காரணத்தை நோக்கும் இடத்து ரசிகர்களின் ரசிப்பு தன்மை இப்போது இல்லையா? அல்லது நகைச்சுவை நாடங்களின் வருகை இல்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது. இல்லாவிடில் தினம் தினம் சோகத்தில் முழ்கியுள்ள இன்றைய மக்கள் எப்படிதான் சிரிப்பதோ?

ஆனால் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும். இன்றைக்கும் மனதில் இருந்த சோகங்கள் எல்லாம் மறைந்து புத்துனர்ச்சியை தரும் நாடங்களிள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘’அண்ணை றைற்.’’

இலங்கையில் ‘’அண்ணை றைற்’’ என்ற தனி நடிப்பு நாடகத்தின் மூலம்தான்; தனி நடிப்பு அறிமுகம்மானது. இந்த நாடககர்த்தா யார் என்றால் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட நடிகர். கே.எஸ். பாலச்சந்திரன் தான்.

கடந்த 2006ம் ஆண்டுடன் இவர் கலையுலகிற்க்கு வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த கலைஞனை பற்றி சிறு அறிமுகம்.

யாழ்ப்பாணம் கரவெட்டி கிழவி தோட்டத்தில் திரு-திருமதி சுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கே.எஸ். பாலச்சந்திரன் ஊர் மக்களால் கணேஸ் என்று அழைக்கப்பட்டார்.

சிறு வயது முதல் படிப்பிலும் கலைத் துறையிலும் அதிகமாக ஈடுபாடு காட்டினார். பாடசாலை நாட்களில் பல நாடங்களில் நடித்தார். இந்த நாட்களில் தான் பேராசியர் சிவத்தம்பியின் தொடர்பு கிடைத்தது.



இவர் பாடசாலை கல்வியை முடித்து கொண்டு இலங்கை இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றினார். இந்த கால பகுதியில் அங்கு பணிபுரித்த புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். கணேசபிள்ளையுடன் பழக்கம் எற்பட்டு அவருடன் இனைத்து பல நாடங்களில் நடித்தார்.

1967ம் கால பகுதியில் ஆண்டு இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். 1970ம் ஆண்டு ‘’அண்ணை றைற்’’ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு மக்கள் முண்ணிலையில் தனி நடிப்பாக நடிக்கப்படடது.


இதற்க்கு பின் இலங்கையின் பல மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும். மேடையேறின. இந்த ‘’அண்ணை றைற்’’ நாடகம். இத் பெருமைக்குரிய நடிகர் கே.எஸ். பாலச்சந்திரன் தொலைக்காட்சி நடிகரும் கூட இலங்கையில் வெளியான ‘’வாடைக்காற்று’’ என்ற படத்திலும். அண்மையில் கனடாவில் வெளியான ‘’உயிரே உயிரே’’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு பெருமை சேர்த்த பல நாடங்கள் இப்போதது ஒலி இழைகளாக வந்துள்ளது. அவையவான ‘’வாத்தியார் வீட்டில்’’ (பாகம் 1,2,3) ‘’அண்ணை றைற்’’ போன்றவையாகும்.

இப்படியான கலைஞனை கலை குடும்பம் கௌரவிக்கவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டுடன் கே.எஸ். பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில். கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம் , பாரதி புறொடக்சன்ஸ் வழக்கும் கே.எஸ். பாலச்சந்திரனின் ‘’அண்ணை றைற்’’ முதலான தனி நடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவெட்டு (cd) வெளியீட்டு விழா ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஞாயறுக்கிழமை scarborough civic centre மண்டபத்தில் இடம் பெற்றது.

கனவு காணும் வாழ்க்கையா?




மிகுந்த மகிழ்ச்சியில்
ஊர் அடைய.........

சின்னப்பு அண்ணையின்
வயல் பரிதாபமாக வரவேற்கின்றது..........

பெரியயப்பர் பெரியபுராணம்
படிக்கும் கொட்டகை
வல்லூறின் எச்சத்திற்க்கு இலக்காகி


நான் தவழ்ந்த வீடு
தாங்க முடியாத வேதனை.

கொஞ்சம் நின்று பார்க்கின்றேன்!

எமக்கு மீண்டும் வசந்தம்
வருமா... என்று?

எத்தனை கனவுகள்....

எமக்கு வாழ்க்கை வழமையாகி விட்டது.

நாம் இன்று கனவுகள்
சுமக்கும் தேசங்களாய்..........

சவ வண்டி


இப்போது எல்லாம் காலத்திற்கு காலம் எல்ல விடயத்திலும் மாற்றம் காணப்படுகின்றது. எனக்கு நினைவு தெரித்த நாளில் இருந்து. இறந்தவர்களை இறுதியாக தகனம் செய்ய எடுத்து செல்லும் போது பல வகையான முறையில் உடலை எடுத்து செல்வார்கள்.

தென்னை ஒலையை பின்னி அதனை அலங்கரித்து. அதில் உடலை வைத்து. தோல்களில் சுமந்து சென்று தகனம் செய்தார்கள். பின்னர் கொஞ்ச காலங்கள் செல்ல சவ வண்டியின் பழக்கம் அதிகரிக்க தொடக்கின.

ஆனால் இப்போது நிலை மாறி விட்டது. தங்களுக்கு விரும்பிய வாகணத்தில் உடலை எடுத்து செல்லுகின்றார்கள். எப்படி இருப்பினும் கிராமங்களில் சவ வண்டி பாவனை இப்போதும் உண்டு.


அண்மையில் எனது கிராமத்திற்க்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்ற போது.

எனது புகைப்பட கருவிக்குள் சிக்கிக் கொண்டது. அந்த புகைப் படத்தை நீங்கள் பார்க்கலாம்.

வடபுல நாட்டார் வழக்கு(சிறுகுறிப்பு)

அருகிப் போய்க்கொண்டிருக்கும் எமது நாட்டின் பாரம் பரிய நாட்டார் வழக்குகளுக்கு உயர் கொடுக்கும் வகையில் எழுத்தாளார் வல்வை ந.அனந்தராசா எழுதிய ‘வடபுல நாட்டார் வழக்கு’என்னும் நூலிலை அண்மையில் வாசித்தேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஆங்காங்கே ஒலித்துத்துக் கொண்டிருந்த. தாலாட்டுப் பாடல்கள், இளம்பெண்களின் கும்மிபப் பாடல்கள் , ஊஞ்சல் பாடல்கள், பாட்டிமாரின் விடுகதைகள், பழமொழிகள் என்பன. கேட்பவர்களின் சிந்தனைகளையும், சொல்லாட்சியையும் வளர்ப்பதில் எவ்வளவு தூரம் பங்கெடுத்துள்ளன என்பதை நினைக்கின்ற போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அன்றைய நிலை மாறி இன்று முற்று முழுதாக எமது நாட்டார் வழக்குகள் இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சம் தோன்றிய வேளையில் இந்த நூல் வெளி வந்து இருக்கின்றது. மகிழ்ச்சிக்குரிய விடயம்.

நாட்டார்பாடல்களில் பிரசவம்,தாலாட்டு.பூப்புனிதநீராட்டு விழா என ஒவ்வொரு பாட்டுக்கள் அது மட்டுமா? காதலர்கள் தங்களுக்கிடையே சந்திப்பை வைத்துக் கொள்வதற்க்கும் பாடல். இப்படியாக நூலாசிரியர் ஒவ்வொரு விடயத்திற்க்கும் சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார்.

இலங்கை புத்தகத் திருவிழா - “நானும் நாலு புத்தகங்களும்”

கொழும்பில் இப்போது எல்லாம் வாரா வாரம் ஏதோ ஒரு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. ஆனால் அதில் எத்தனை தேறுபவை என்று காலம்தான் சொல்லும்.

இந்த வாரம் இலக்கிய ஆர்வலர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் நிகழ்வு புத்தக திருவிழா எனலாம்.

நேற்று எப்படியும் புத்தக திருவிழாவிற்க்கு போய் விட வேண்டும் என யோசித்த போதும். மழையும் கூடுதலாக பெய்து கொண்டு இருந்ததால் கைவிட்டுவிட்டால், இன்றைக்கும் மழை அப்படியே தான் இருந்தது. நல்ல விசயங்கள் நடைபெறுகின்ற போது மழை பெய்யும் என்று படித்த ஞாபகம். உண்மையாய் இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது அப்போது.

அப்படி இப்படி என்று இன்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட இரவு 6 மணியாகி விட்டிருந்தது.

நாங்கள் நுழைந்தது பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பக்கவாடாக இருக்கும் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் வாயில் வழியாக.

ஏராளமானனோர் நிரம்பி வழிந்தாலும் பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தின் ஆடம்பரம் அதனை தூக்கி சாப்பிட்டு விட்டிருந்தது. ஒரு புத்தக கண்காட்சி போல் இல்லாமல் ஆடம்பர விடுதி ஒன்றில் நடக்கும் விருந்துபாரத்தின் ஆடம்பரம் அங்கே இருந்தது. ஆனால் நெரிசல், சத்தம் , வியர்வை , எதுவுமே இல்லாத இடம். சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் முன்னால் போடபட்டிருந்த தற்காலிக கொட்டகைகளுக்குள் ஏராளமான விற்பனைக்கூடங்கள் இருந்தாலும் சேமமடு புத்தகசாலை மட்டும் தான் அதற்குள் தமிழ் விற்பனைக் கூடம்.

சேமமடு விற்பனைக் கூடத்திற்குள்ளே நுழையும் போதே லேனா தமிழ்வாணன் கறுப்புக் கண்ணாடியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றை முன்னால் வைத்திருந்ததை கண்டேன். அனேகமான இலங்கை நூல்கள் இருந்தன என்று சொல்வதைக் காட்டிலும் அங்கு இருந்தவற்றில் அனேமானவை இலங்கை நூல்கள். தமிழ் மண் பதிப்பகத்தின் நூல்கள் பலவும் இருந்தன. அவை அடுக்கப்பட்டிருந்த விதம் காரணமாக எல்லாவற்றையும் பார்க்கமுடியவில்லை. ரஞ்சகுமாரின் “மோகவாசல்” மீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு அங்கு இருந்தது. மோகவாசலை ஒரு நைந்து போன புத்தகமாக வாசித்த நினைவு. ஆனால் அங்கு ஏதுவுமே வாங்கமால் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்திற்குள் நுழைந்தால் அங்கு அது முற்றிலும் குளிரூட்டப்பட்டிருந்தது. இந்த குளிரூட்டல் காசு எல்லாவற்றையும் புத்தகத்தில் சேர்ந்துக் கொள்வார்களோ என பயந்து கொள்ள வேண்டியிருந்தது.

அங்கிருந்த தமிழ் விற்பனைக் கூடங்களான ஜெயா மற்றும் பூபாலசிங்கம் என்பனவற்றிலுள் ஜெயா தனியே பாடசாலை மாணவர்களுக்கான நூல்களை மாத்திரம் கொண்டிருந்தமையினால் நேராக பூபாலசிங்கம் புத்தகசாலையின் விற்பனைக் கூடத்திற்கு நுழைந்தேன். அவர்களும் தாங்கள் தான் இலங்கையின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகக் கடை என்பதை காட்டுவது போல புத்தகங்களை கட்டுக்கட்டாக , ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்தனர். எப்படி? என முடியும் பல புத்தகங்களும் விகடன் பதிப்பக நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தனர். பா.விஜய்க்கும் வைரமுத்துவிற்கும் ஒரு கணிசமான இடத்தை ஒதுக்கி பார்ப்பதற்கு இலகுவாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். என் போதாத காலத்திற்கு நான் தேடும் புத்தகங்களை தான் முதல் சொன்ன மாதிரி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். எனினும் ஒரு புத்தகத்தை அது என்ன தலைப்பு என்று பார்ப்பதற்கு குறைந்தது 15 புத்தகங்களையாவது தூக்க வேண்டியிருந்தது. என்னை போல் இன்னொரு விக்கிரமாதித்தியனும் விடாமல் கட்டுக்களை தூக்கி தூக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரிடம் நான் தேடும் சில புத்தகங்களின் பெயரை சொல்லி இதை கண்டனீங்களோ என்று கேட்க “நான் சும்மா ப்ரண்டோட வந்தனான் சும்மா பார்க்கிறன்” சொல்லிக் கொண்டே செல்பேசியை காதில் வைத்துக்கொண்டார். ஒரு பக்கத்தில் "year eleven science exercise book கொண்டு வந்தனீங்களே? என்று கேட்க ஆரம்பித்த பெண்மணி தான் மட்டும் அங்கு புத்தகம் வாங்க வந்தவர் போல ஊரை கூப்பிட தொடங்கினார். நானும் பொறுமையிழந்து அங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்த விற்பனை பிரதிநிதி பெண்களில் ஒருவரை அழைத்து நான் தேடும் புத்தகங்கள் இதற்கு இருக்கா என கேட்டேன். அதற்கு அவர் அந்த புத்தக றாக்கையை பார்த்து தியானம் செய்து போட்டு சொன்னார். “அண்ணா நீங்கள் இங்க தேடுறதை விட வெள்ளவத்தை கடைக்கு வந்தியள் எண்டால் கட்டாயம் கிடைக்கும்” என்று. எடுத்த நான்கு புத்தகங்களையும் கொண்டு வெளியே வந்தால் பண்டார நாயக்கா மண்டபத்திற்குள்ளும் ஏறி இறங்கினோம். வெளியே வந்தால் ஒரு இடத்தில் சிறிய கூட்டம். எட்டிப்பார்த்தால் உள்ளே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அந்த இடத்தை நாங்கள் ஏற்கனவே கடந்து சென்றிருந்தாலும் முதலில் நாங்கள் அதை கவனிக்கவில்லை. மெல்லிய இசை பரவ ஒரு இசைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது கண்காட்சிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாத படி.

ஏறத்தாள 400 விற்பனைக் கூடங்களில் ஆக நான்கு விற்பனைக் கூடங்கள்தான் தமிழ் என்றால் ஆங்கில சில தவிர மிகுதி அனைத்தும் சிங்கள விற்பனைக் கூடங்களே. சிங்கள விற்பனைக் கூடங்கள் நிறைந்திருந்தது போல வாங்குவதற்கு ஆக்களும் நிறைந்திருந்தனர். ஆக தமிழ் விற்பனைக் கூடங்கள் ஈ ஓட்டுவதற்கும் காரணம் என்ன? கொழும்பில் தமிழ் மக்கள் இல்லை என்பதா? அல்லது அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் மறந்து விட்டதா? தவிரவும் தமிழ் நூல் விற்பனையாளர்களும் தங்களின் தொழிலை professional ஆக செய்யாமல் ஏதோ சமூக சேவை செய்வது போன்று இருப்பதும் இதற்கு காரணமாய் இருக்கும் என நினைக்கின்றேன். உதாரணமாக அங்கிருந்த எம்.டி. குணசேன பதிப்பகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிங்கள புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த விதம், ஒழுங்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. எம்.டி.குணசேனவின் தமிழ் வெளியீடுகள் குறித்து கேட்ட போது சிங்கள விற்பனைப்பிரதிநிதிகள் அந்த புத்தகத்தை தாங்கள் வாசித்தவர்கள் போல் கதைக்க தொடங்கினார்கள். இதுதான் தமிழ் புத்தக விற்பனைக் கூடங்கள் விட்ட பிழைகளில் ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் பண்டார நாயக்கா மகாநாட்டு மண்டபம் ,சிறிமாவோ நினைவு மண்டபம் , அதற்கு முன் மெல்லிய இசை பரவ நடந்த சிங்கள இசை நிகழ்ச்சி, அங்கிருந்த மகி விற்பனைக் கூடத்தின் நூடில்ஸ், அதிகம் ஏன் பண்டார மண்டபத்தின் கழிப்பறை கூட நல்லாய் இருந்தது. புத்தக கண்காட்சிதான் சோபிக்கவில்லை.

வாங்கிய நான்கு புத்தகங்கள்.

உயிர்த்திருத்தல் - யூமா வாசுகி
வாழ்நிலம் - சுகுமாரன்
ஜே ஜே சில குறிப்புக்கள் - சுந்தர ராமசாமி
கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன் - எழில்வரதன்

மல்லிகை "தமிழச்சியும்" மெட்ரோ நியூஸ் "ஜெஸிலாவும்"

வலைப்பதிவாளர்களையும் வலைப்பதிவுகளையும் அறிமுகப்படுத்தும் படலங்களை இப்போது சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தொடங்கியுள்ளன போலும். இலங்கையில் இருந்து கடந்த ஐம்பது வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் மல்லிகையின் இந்த வருட ஒகஸ்ட் இதழில் “மின்வெளிதனிலே” என்னும் இணையத்தளங்ளை அறிமுகம் செய்யும் பக்கத்தில் தமிழச்சியின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. இந்த பக்கத்தினை எழுதுபவர் மேன்மகவி என்பவர். தமிழச்சி பற்றிய அறிமுகம், புகைப்படம் என்பனவற்றோடு வந்திருக்கும் இவ்வறிமுகம் தமிழச்சியின் வலைப்பதிவில் உள்ள பெரியாரின் கருத்துக்களை மொத்தமாக ஐந்து பக்கங்கள் வரை எழுதப்பட்டிருக்கின்றது.

தவிர அகர வரிசையில் தொடங்கும் சில வலைப்பதிவுகளையும் மல்லிகை வெளியிட்டு இருந்தது. அந்த மல்லிகை இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் யாருடைய வலைப்பதிவுகள் பற்றி வந்திருந்தன என்று சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்றைய “மெட்ரோ நியூஸ்” பத்திரிகையில் ஜெஸிலாவின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. “மெட்ரோ நியூஸ்” என்பது இலங்கையின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் நகரப்பதிப்பாகும். “மெட்ரோ நியூஸ்” இவ்வாறு வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் வேலையை நெடுநாளாக செய்து வருகின்றதா? அல்லது இன்றுதான் தொடங்கியிருக்கின்றா என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் இன்றுதான் “மெட்ரோ நியூஸை” முதன் முதலில் எடுத்திருக்கின்றேன

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர் ஒருவருடன் நேர் காணல்


இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிடும் படியாக 1983ம் ஆண்டின் பின்னரான இனக்கலவரத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டிற்கும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து சென்றார்கள்.இவர்கள் அங்கு சென்று பல வருடங்கள் ஆகியும் தமிழர்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு விடாமல் பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

இவ் விடயம் தொடர்பாகவும் அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ் மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ளவும் இலங்கைக்கு வந்த தமிழ் பிரமுகர் எஸ்.சற்குணலிங்கம்; அவர்களைச் சந்தித்த போது ஆரவாரத்திற்கு வழங்கிய செவ்வியினைத் தருகின்றேன்.

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த சற்குணலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் கூட்டுறவு திணைக்களத்தின் தலைமைப் பரிசோதகராக கடமை புரிந்து 1987ம் ஆண்டு முதல் இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் அஸ்வுரேலியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்ற ஈழத்தமிழ் சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் சங்கம் உட்பட பல தமிழ் அமைப்புக்களின் உறுப்பினராக இருந்து தம்மாலான பணிகளை ஆற்றி வருகின்றார்.

இவரிடம் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள்

கேள்வி- நீங்கள் 1987ம் ஆண்டில் இருந்து இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றீர்கள். மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பின் தாயக மண்ணில் கால் பதித்திருக்கிறீர்கள் இதனை எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில்- நான்1987 ஆண்டு இலங்கையில் ஏற்ப்பட்ட போர் சூழல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றேன். மீண்டும் நான் பிறந்த மண்ணில் கால் பதித்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். போர் மேகம் அப்படியே இருந்தாலும் 19வருடங்களின் பின் நிறைய மாற்றங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

கேள்வி-இலங்கையில் இருந்து தற்போது அவுஸ்ரேலியா நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது தமிழ் மக்கள் எவ்வாறு இருக்கின்றார்கள்? எப்படி எமது கலாசாரம் இருக்கின்றது.

பதில்- அவுஸ்திரேலியா இலங்கையை போல் 250மடங்கு பெரிய நிலப்பைக் கொண்ட ஒரு கண்டமாகும் அங்கு. 1.சிட்னி 2.மல்பேன் 3.பிறிஸ்பேன் 4.கன்பரா 5.அடிலயிட் 6.பேத் 7. தஸ்மேலனியா 8.டாவின் என எட்டு பெரிய மாநிலங்கள் உள்ளன. அங்கு இருக்கின்ற தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றார்கள். சகலருக்கும் கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலான தமிழ் மக்கள் உயர் தொழிலில் இருக்கின்றார்கள்.

மேலும் எமது நாட்டைப் போல் எமது தமிழ் மக்கள் தமது கலாசாரத்தைப் பேணும் விடயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் மொழி கல்வி நடவடிக்கைகள் இலக்கிய விழாக்கள் நடன அரங்கேற்ற நிகழ்வுகள் கூடுதலாக நடைபெறுகின்றன. ஈழத்தமிழ்ச் சங்கம் 9தமிழ்ப்பாடசாலைகளை நடத்தி பிள்ளைகளுக்கு கருத்து தமிழ்க் கல்வியை ஊட்டுகின்றது.
இதே போன்று வேறு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவற்றிக்கு அவுஸ்திரேலியா அரசும் உதவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

கேள்வி- இங்கு வாழ்ந்து வருகின்ற பல முதியவர்கள்
அங்கு இருக்கின்ற பிள்ளைகளால் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அங்கு உள்ள அரசாங்கத்தால் எவ்வகையானஉதவிகள்வழங்கப்பட்டுகின்றது.

பதில்- முதியோர்கள் வீட்டில் எப்படி இருந்தாலும் அரச அமைப்பைப் பொறுத்த வரையில் அவர்கள் மூத்த பிரசைகள் என கருதப்படுகிறார்கள். முதியோர்களுக்கு வேறான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அட்டை மூலம் அவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதிகளையும் பெறவும் பிரயாணம் செய்யவும் முடியும் இதனை விட முதியோர்களுக்கு ஒய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.

கேள்வி- இலக்கிய பணிகள், சமூகப் பணிகள் எந்த வகையில் நடைபெற்றவருகின்றது.

பதில்- ஈழத்து தமிழ்ச்சங்கம் , தமிழக், கலாச்சார கழகம், என பல அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டேன். குறிப்பாக புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் தமிழ் மொழியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைளை எடுத்து வருகினறன.
சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. விழாக்களையும் நடத்துகின்றோம். தமிழ்ப் அறிஞர்களின் விழாக்களும் இதில் அடங்கும். நமது மக்கள் இவற்றில் எல்லாம் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்.

கேள்வி- மக்கள் எவ்வாறு எமது கலாசாரத்தையும் சமய வழிபாடுகளையும் பேணிக்காத்து வருகிறார்கள்

பதில்-35ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றாரகள். பல இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டு தினசரி பூசை விசேட பூசைகள் திருவிழாக்கள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. மூன்று தமிழ் அமைப்புக்கள் மூலம் பாடசாலைகளில் சனி ஞாயிறு நாட்களில் தமிழ் வகுப்புகளை நடாத்தி வருகின்றனர்.

நானும் சைக்கிளும்


நான் இந்த முறை சைக்கிளை பற்றி எழுதலாம் என்று நினைக்கின்றேன். என்ன நான் சைக்கிளின் தயாரிப்பு பற்றி நான் எழுதவில்லை. இப்போது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் மோட்டார் சைக்கிள் நிற்கின்றது.

சைக்கிள் என்றால் கடவுள் மாதிரி இருந்த காலமும் ஒன்று இருந்தது. நான் சின்ன பெடியனாய் இருக்கும் போது மாமா வீட்டுக்குள் ஓடும் சைக்கிள் வாங்கி தந்தார். அதே நேரம் பெரியம்மாவின் மகன் பிரகாஸ் அண்ணாவிடமும் ஒரு சின்ன சைக்கிள் இருந்தது. இரண்டு பேரும் தாத்தாவின் அரிசி ஆலையின் நெல் காய போடும் சீமேந்து மேடையில் இரண்டு சைக்கிள்களிலும் ஓடிய நினைவு.

பின்னர் இரண்டு பேரும் கொஞ்சம் வளர்த்த பின் எங்கள் சைக்கிள்கள் தம்பிமாருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது என்றால் மாற்றி உறுதி பத்திரமும் வழங்கப்பட்டது என்று கூட சொல்லாம். ஏன் என்றால் தம்பிமார் எங்களை அந்த சைக்கிகளில் தொடக்கூட விடவில்லை. அதன் பின் அவர்கள் கூடிய நாட்கள் அந்த சைக்கிளில் ஓடியதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அந்த சைக்கிள்களில் கூடிய நாட்கள் திருத்த வேலை தாங்களே செய்யத் தொடங்கினார். சில வேளையில் அதன் தாக்கம் தான் இப்போது ஒரு தம்பி கணணித் துறையிலும் , இன்னொருவன் தொழில் நுட்ப துறையிலும் தேர்ச்சிபெற்றவர்களாக விளங்க காரணம் என நினைக்கின்றேன். ஒரு முறை தம்பிமார் அண்ணா வைத்திருந்த சைக்கிளை எனது சைக்கிளில் கயிற்றினால் கட்டி இழுத்து சென்றார்கள். என்ன விசயம் என கேட்ட போது சைக்கிளின் இஞ்சின் பழுதாய் போய் விட்டதாக கூறினார்கள். நான் நினைக்கின்றேன் செல்வ மாமாவின் லொறி இஞ்சின் பழுதாய் போய் விட்டால் சுவேந்திர மாமாவின் உழவு இயந்திரத்தால் இழுத்து செல்வது வழக்கம். இதனை பார்த்து தான் அவர்கள் அப்படி செய்து இருக்க வேண்டும்.

சில வருடங்களின் பின் அந்த சைக்கிளில் இரண்டையும் காணவில்லை. அதன் நினைவாய் ஒரு போட்டோ மட்டுதான் இருக்கு. சாந்தி அக்காவின் பிறந்த நாளுக்கு நானும் அண்ணாவும் சைக்கிளில் இருந்து போட்டோ எடுத்தோம். அதுதான் இப்ப அதுகளுக்கு ஒரு நினைவுச் சின்னம். அந்த போட்டோவை எங்களின் விருப்பத்திற்க்கு எற்றபடி போட்டோ எடுத்த மனோ அண்ணாவிற்க்கு ஒரு ஓ...போடலாம் நீங்களும் ஓ...போடுங்கோ ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் அந்த சமயத்தில் எடுத்த போட்டோ பெரிய விசயம்.

பின்னர் நாங்கள் வளர வளர பல சைக்கிள்கள் வீட்டிற்க்கு வந்து போன ஞாபகம். பின்னர் அப்பா ‘’சாளி’’ மோட்டார் சைக்கில் வைத்து இருந்ததாக நினைவு. விடியவேளையில் நான் எழும்பி முதல் வேளையாக ‘’சாளி’’ மோட்டார் சைக்கிளை துடைத்து. பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி எங்கட வீட்டு கேற்றடி மட்டும் ஓடி போட்டு கொண்டு வந்து கொடுக்கதான் அப்பா கந்தோருக்கு போவார். அதற்கு அம்மா பேச தொடங்கினால் அதற்கு நான் பல கதைகளை கூறுவேன். ‘’இஞ்சின் கீற் பண்ண வேணும் அது தான் மோட்டார் சைக்கிலை ஓடி போட்டு கொண்டு வந்தனான்” என்பது அதில் ஒன்று. அதற்கு ‘’வீட்டிலில் பொறுப்பான பையன்’’ என்ற பட்டமும் பெற்றேன். ஆனால் இப்போது அந்த ‘’பட்டம்’’ எனக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை.

பின்னர் தம்பி சிவம் அண்ணாவின் மோட்டார் சைக்கிலில் ஒடி பழகி இப்போது யாமஹாவிலும் ஓடுகின்றான். அண்ணாவும் யாருக்கும் தெரியாமல் ‘’றைவிங்’’ பழகி பின்னர் இடம் பெயர்வு நேரம் வீட்டில் இருந்த பொருட்களையும் வீட்டில் நின்ற லொறியை எடுத்து கொண்டு வந்த பின்னர் எங்கள் மாமான்மார்கள் “சிறந்த ரைவர”; என்ற பெற்றார். அதன் பின்னர் எல்லோருக்கும் தெரிய கூடியதாக வாகனம் ஓட்டினார். அதைவிட மகாலிங்கம் தாத்தா தனது பிள்ளைகளிடம் டக்ரரை ஓட கொடுக்காமல் அண்ணாவிடமே கொடுத்தார்.

இப்படி எல்லா உறவுகளும் மோட்டார் சைக்கிள், கார் என ஓடிகொண்டு இருந்தார்கள். நான் ஒருநாள் அண்ணாவிடம் எனக்கும் ‘’றைவிங்’’ பழக்கி விடு என்றேன். ஓம் பழக்கிவிடுகின்றேன் என்று சொல்லி,சொல்லி கடைசியில் இப்ப லண்டனில் இருக்கிறான். ஆனால் மோட்டார் சைக்கில் மட்டும் ஓடுவதற்கு பழக்கி விட்டான். நான் கேட்டது பெரிய வாகனம் ஓட்டுவதற்கு. அதற்கு அவன் கால் வளர வேண்டும் என சொல்லி சொல்லி எமாத்தி போட்டான்.


எனது தம்பி தன்னுடைய சட்டைப் பையில் இருந்து அடிக்கடி தன்னுடைய ‘’றைவிங்’’ ‘’லைசன்சை’’ எடுத்து காட்டும் போது, எனது மனதுக்கு க~;டமாக இருக்கும். ஏன் என்றால் இந்த காலத்திலை வாகனம் ஓட்ட தெரிய விட்டாலும், கணணி இயக்க தெரியவிட்டாலும் “மக்கற்” இல்லையாம். இதனால் மாமாவிற்க்கு தெரியாமல் போய் றைவிங் ஸ்கூலில் சென்று விண்ணப்பம் செய்தபோது அங்கு இருந்தவரால் எனது விண்ணப்பம் திருப்பி தரப்பட்டது. காரணமாக “நீங்கள் இந்த மாவட்டமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பொலிஸ் பதிவு தேவை” என்றார்.

இரண்டு வருடத்திற்கு முன் தம்பி ‘’லைசன்ஸ்’’ எடுக்கும் போது ‘’றைவிங்’’ ஸ்கூல்கள் போட்டி போட்டு விண்ணப்பகளை எற்று கொண்டதும் தம்பி தனது இறுதி பயிற்சியை தலைநகரில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள மாவட்டம் வரை கனரக வாகனத்தை ஓட்டி சென்று சிறந்த றைவர் என பெயர் பெற்றான்.


நான் சைக்கிளில் கதை கூறுவதாக கூறி இப்போது மோட்டார் சைக்கிள், வாகனம் எண்டு வந்திட்டன் மன்னிக்க வேண்டும் எல்லாம் “சின்ன சின்ன ஆசைதான்”.


வீட்டிலில் இரண்டு சைக்கில் மட்டும்தான் இருந்தது. அப்பாக்கு ஒரு சைக்கிள் மற்றது சைக்கிள் தங்கைச்சியினுடையது. தம்பி யாமஹாவிற்கு சொந்தக்காரன்.


அப்பா கந்தோர் என்டு ஓடி கொண்டு இருப்பார். தங்கைச்சியும் தம்பிக்கு நிகர் சைக்கிள்
தரமாட்டாள். ஒரு முறை அவளுக்கு தெரியாமல் சைக்கிளை பள்ளத்துக்குள் விட்டு உடைத்து பின்னர் அம்மாவிடம் பேச்சு வாங்கியதுடன் ஒரு வாரமாய் கதைக்கவும் இல்லை.


வெறும் சைக்கிளுக்கு கூட எங்கள் ஊரில் அந்தளவுக்கு மதிப்பு நம்பினால் நம்புங்கோ.


பின்னர் புதுக்குடியிருப்பிலை ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த கடிதம் கொண்டு வந்த பியோன் அருந்தவலிங்கம் அண்ணாவிற்கும் ஒரு ஓ...போடலாம். ஏன் என்றால் நானும் சைக்கிள் வாங்குவன் என்ற கனவை நிஜமாக்கியது அந்த வேலை என்பதற்காக அப்படி சொன்னேன்.


அப்ப சம்பளம் எவ்வளவு என்று கேட்டாள் சிரிப்பியள். வெறும் 1500 ரூபாதான். ஆனால் இப்போது நல்ல சம்பளம் எடுக்கின்றேன். அப்போது அந்த நிறுவனம் எனக்கு பிடித்த படியினாலும், அதனால் எனக்கு பல நன்மையும் கிடைத்தது. நான் விரும்பி சென்ற துறைக்கு அந்த நிறுவனம் ஒரு வழிகாட்டியாகவும் அமைந்தது.

மூன்றாவது ஆள் பாவித்த சைக்கிலை 1000ரூபாவிற்கு வாங்கினேன். பிரேக் இல்லை. காலால் தான் பிரேக் பிடிக்க வேண்டும். சீற்றுக்குள் இருக்கும் கம்பி குண்டியில் குத்த குத்த ஓடி வேலைக்கு போவேன். நான் செய்த பாவம் எனக்கு வெளி வேலைதான் தந்தார்கள். இப்போது நான் செய்த வேலையை செய்யும் இன்னுமொருவருக்கு நிறுவனத்தால் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் வளர்ச்சியாக இருக்கலாம். அல்லது அவன் அதிஸ்கரனாய் இருக்க வேணும்.

போன கிழமைதான் அப்பா போனில் கதைக்கும் போது சொன்னார் இப்ப புதுசா ஒரு மோட்டார் சைக்கிள் வந்திருக்காம். பழைய மோட்டார் சைக்கிளை விற்று போட்டு புதுசா எடுக்க போறம். தங்கைச்சியும் புதுசா லேடிஸ் மோட்டார் சைக்கிளும் எடுக்க போறளாம்.

அப்பாவிடம் எனது அன்பான வேண்டுகோள். அந்த சைக்கிளுக்கு அடிக்கடி ஒயில் போட்டு துடைக்க சொல்லுகின்றேன். ஏன் என்டால் அதுவும் இல்லை என்றால் இந்த ராசனுக்கு நடராசாதான்.

வலைப்பதிவர்களே!! பரிசு தரக் கூப்பிடுறார் அப்பாவி

அப்பாவி தனது பிளாகில் “கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்” என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>

இலங்கையில் இருந்து புதிய இணைய வானொலி

அண்மைக்காலமாக இலங்கையில் திடீரென கலை இலக்கிய செயற்பாடுகள் வேகம் பெற்றுள்ளது போன்று தெரிகின்றது. வலைபதிவில் ஏராளமானவர்கள் வந்து குவிகின்றார்கள். அடுத்தடுத்து சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்குகின்றன. மிகப்பெரிய பத்திரிகை நிறுவனங்கள் சில தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இணைப்பு பத்திரிகைகளை அதிகமாக்குவதோடு, தமது இணையத் தளங்களையும் விரிபடுத்த தொடங்கி இருக்கின்றன. சக்தி தொலைக்காட்சியும் விஜய் ரிவீயின் பாணியில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து பல லட்சங்களை பரிசுத் தொகையாக அறிவிக்கின்றனர். ( விஜய் ரிவீயின் ஜுனியர் சுப்பர் சிங்கர்ஸ், சின்மயி, ஹாரிஸ் ராகவேந்திரா, தினா, மாதங்கி என தமிழ்நாட்டு பிரபலங்களும் இவர்கள் தயவால் இங்கு வந்து போய் கொண்டு இருக்கின்றனர்) இவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக ஒரு இணைய வானொலி ஒன்றும் ஆரம்பித்து பட்டிருக்கின்றது. இலங்கை தமிழோசை என்னும் பெயரில் என்னும் பெயரில் 24 நான்கு மணி நேரமும் http://www.strfm.com/ என்னும் இணைய முகவரியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

லண்டனிலும் , கனடாவிலும் இருந்து இதன் நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடக்கிறது. இதன் அங்குரார்ப்பண விழா 25-08-2007 அன்று இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ் தில்லை நடராஜா கலையகத்தை திறந்து வைத்ததோடு , அவ்வானொலியின் குறியீட்டு இசையை இயக்கி ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.


இந்த நிகழ்விற்கு மூத்த அறிவிப்பாளரான ராஜேஸ்வரி சண்முகம் , இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியர் இளையதம்பி தயானாந்தா , நாடக ஜம்பவான் மரிக்கார் எஸ். ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை வானொலியில் இருந்து ஓய்வு பெற்ற பலரும் வந்திருந்து கூடியிருந்து தமது பழைய நினைவுகளை பகிர்ந்த படியிருந்தனர்.

மரிக்கார் எஸ். ராமதாஸ் (இவர்தான் இலங்கையின் 100 நாள் ஓடிய ஈழத்தமிழ் திரைப்படங்களான கோமாளி மற்றும் ஏமாளிகளின் சொந்தக்காரர்) தளர்ந்து போயிருந்த தனது குரலினால் இவர்கள் ஆங்கிலத்தையும் கலந்து அறிவிப்பு செய்து தமிழ்க்கொலை செய்யக் கூடாது என தனது உரையில் பல தடவைகள் குறிப்பிட்டதை அவதானிக்க கூடியதாயிருந்தது.

ஆச்சரியம் என்னவென்றால் ஏறத்தாள 25 அறிவிப்பாளர்களை பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்கள். பண்பலையில் ஒலிபரப்ப அரசின் அனுமதிபத்திரத்திற்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரியவருகின்றது. மிகவிரைவில் அது பண்பலையில் வரும் என்று வீரகேசரி, தினக்குரல் எல்லாமே சேர்ந்து சொல்கின்றன. ஆனால் என்னவென்றால் இப்போது அந்த இணையத்தளத்தில் அது ஒலிக்க காணோம். நான் நினைக்கின்றேன் ஏதாவது தொழிநுட்ப கோளாறாய் இருக்கலாம் என்று. சில நாட்களில் சரி வந்து விடலாம்.




இணைய முகவரி
http://www.strfm.com/


முகவரி
இலங்கை தமிழோசை
16-1 பரகும்பா வீதி
கொழும்பு
இலங்கை

தொலைபேசி
0094602172668

‘’இருக்கிறம்’’ இதழ் 3

‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் 3வது இதழ் வெளியாகி விட்டது.
விஜய்யின் படத்தை அட்டைப்படமாக கொண்டு இது வெளிவந்து இருக்கின்றது.

வழமையான பல தொடர்களான பனையடிப்பக்கம், கே.எஸ் பாலசந்திரனின் வானொலிக் கால நினைவுகள், சோக்கல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பனவும் கோவிந்தராஜ், கீதாவாணி, கனிவுமதி , வெள்ளை உருவி, தர்மேந்திரா, ஆகியோரின் சிறுகதைகளும் த.ஜெயசீலன், வி.தயாபரன், ச.வால் ஆகியோரின் கவிதைகளும், சாந்தி அனுசா, பார்த்திபன் ,ரஹ்மான் ஆகியோரின் கட்டுரைகளும், வெளிவந்திருந்திருக்கின்றது. சிரித்திரன் பாணி நகைச்சுவைச் சித்திரங்களும் இரண்டு மூன்றும் இருக்கின்றது. ஒரு இடத்தில் சிரித்திரனில் வந்த சித்திரத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள் (நன்றி கூறி) . வடிவமைப்பும் வழமை போலவே அசத்தல்தான்

அமுதம் என்னும் சஞ்சிகை


இலங்கை கொழும்பிலிருந்து அமுதம் என்னும் சஞ்சிகை இன்று தொடக்கம் வெளிவர தொடங்கியுள்ளது.

இரு வாரத்திற்க்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையில்அரசியல்,கலை,இலக்கியம்போன்ற
விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இம் முறை வெளிவந்துள்ள சஞ்சிகையில். சந்திரிகா மீண்டும் களத்தில், நமீதாவின் காதல், கடத்தல்van, கமல் அவதாரத்தில் வழக்கு, இந்திய தமிழ் இராணுவம், கிழக்கு ரிப்போட், ஜெயம் ரவி- பரத் கொஞ்ச நேரம் போன்ற பிரதான விடயங்களுடன்.
பாலு மகேந்திராவின் (வடிகால்) என்.எஸ் -எம் - இராமையா(கோவில்) துசாந்தினி(மீண்டும் ஸ்டெல்லா) ஆகியோரின் சிறுகதைகளும் சூரியன் எவ்.எம்.மின் புகழ் பூத்த அறிவிப்பாளர் திரு. லோசன் - அவரின் மனைவி ஆகியோருடன் சந்திப்பு, உடுவை எஸ் - தில்லைநடராசா, உடப்பூர் வீரசொக்கன், ஆகியோரின் கட்டுரைகளும், திருக்குமரன், கவிதையும், பண்ணாமத்துக் கவிராயாரின் மொழிபெயர்ப்பு கவிதையும், நடன ஆசிரியை திருமதி- வாசுகி ஜெகதீஸ்வரனுடனான நேர் காணல் ஆகிய விடயங்களை அடங்கி அமுதம் மலர்த்துள்ளது.
சஞ்சிகையின் தொடர்புக்கு

ஆசிரியர்
மீரா செந்தில்

உதவி ஆசிரியர்கள்
சி.கே. முருகேசு
சென்னை கண்மனி
ஏ.ஆர்.வி
த.ஈஸ்வரராஜா
வி.க.சர்மிளா

முகவரி
அமுதம் பப்ளிகேசன்ஸ்
2ம் மாடி, சீகல் பிளாசா
11,ஆர்த்தர்ஸ் பளேஸ்
கொழும்பு – 04
இலங்கை

தொலைபேசி
0094115754800
தொலைநகல்
0094112553863

இலங்கையில் புத்தக திருவிழா

எதிர் வரும் 8ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை இலங்கையில் மாபெரும் புத்தக திருவிழா ஒன்று இடம் பெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மணடபத்தில் இடம் பெறவுள்ளது.


இன் நிகழ்வில் இலங்கையில் உள்ள பல புத்தக நிலையங்கள் இங்கே புத்தங்களை விற்பனை செய்யவுள்ளனர்

இவ் புத்தக திருவிழாவிற்க்கு 12 அனுசரணையாளர்கள் உறுதுணையாக விளக்கவுள்ளனர். இதன் பிரதான அனுசரணையாளராக குணசேன நூல் வெளியீட்டு நிறுவனம் விளங்கின்றனர்

மொத்தம் 350 விற்பனை கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 40தொடக்கம் 50வரையான விற்பனை கூடங்களை வெளிநாட்டு நூல் வெளியீட்டளர்கள் அமைக்கவுள்ளனர்.

இவ் புத்தக திருவிழாவை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கல்வியமைச்சு பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்களைவங்குவதற்க்கு 6கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
எனவே இத் புத்தக திருவிழாவில் வருமானம் மொத்தமாக 10 கோடி ரூபாவை தாண்டும் என எதிர்பார்க்கபடுகின்றது.

குஞ்சியேல்லோ கொழும்புக்கு வந்திட்டா

சுமார் இருபது வருடங்களுக்கு முன் கரவெட்டி கிழவிதோட்டத்திலை சின்னாச்சி எண்டால் எல்லாருக்கும் தெரியும். இப்ப குஞ்சி எண்டாத்தான் தெரியும். நானும் கன நாளாய் யோசிச்சனான். ஏன் இவாவை குஞ்சி எண்டு கூப்பிடினம் எண்டு. பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி அவாவை குஞ்சி எண்டுதான் கூப்பிடுவினம். நான் மட்டும் எங்கள் உறவினர்களாக இருந்த படியினால் அம்மா எனக்கு “குஞ்சியம்மம்மா” எண்டு சொல்லித் தந்து நானும் என் சகோதரர்களும் அம்மம்மா என்றே கூப்பிடுவம். ஆனா குஞ்சியம்மம்மாவின் பிள்ளைகள். எல்லாம் தாயை குஞ்சியெண்டே கூப்பிடுவினம். எனக்குள் இருந்த கேள்வியை அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன். அதற்கு அம்மா கூறினா. தன்ர தாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும். என்றும் அதில குஞ்சி தான் கடைசியாய் பிறந்த படியினால் அவாவை எல்லாரும் குஞ்சி எண்டு கூப்பிட அவையிட்ட பிள்ளைகளும் குஞ்சியெண்டெ கூப்பிட்டவை. இன்னுமொரு விடயத்தையும் அம்மா சொன்னா. அந்தக் காலத்தில தாயின் இளைய சகோதரியை சித்தி , அன்ரி எண்டு கூப்பிடுவதில்லை. சின்னம்மா அல்லது குஞ்சி எண்டே கூப்பிடுவினம். இது இப்படியே பழகி ஊர்க்காரர் எல்லாம் குஞ்சியெண்டே கூப்பிட தொடங்கிற்றினம்.

இப்ப குஞ்சி கொள்ளுப் பேரனையும் பார்த்துவிட்டாள். எல்லோருடனும் அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதால் ஊர் மக்களுக்கு பரிச்சியமாக போய்விட்டார். குஞ்சிக்கு கன நாளாய் கொழும்புக்கு போக வேணுமெண்டு ஆசை. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில. மூத்த மகன் மட்டும் கலியாணம் செய்து கொண்டு பக்கத்து ஊரில் இருக்கிறார். எப்பவும் இடைசுகம் கலியாண வீடுகள், ஊர்க் கோயில் திருவிழா எண்டால் தாய் வீட்டு ஒழுங்கையால் அவரின் மோட்டார் சைக்கிள் வந்து போகும்.

முந்தியெண்டால் அடிக்கடி வெளிநாட்டுச் சனம் யாழ்ப்பாணத்துக்கு வந்து போகும். உந்த முகமாலை பாதை திறந்திருக்கிற நேரத்தில இவள் தெய்வானை அக்காவின்ர தேவகி குடும்பத்தோட வந்து போனாள். அப்ப வீட்டுக்கு வந்தாள். அப்பதான் சொன்னவள் நிர்மலா அக்காவுக்கும் ஊருக்கு வரவேணும் எண்ட ஆசையாம். உடன வர முடியாது ஏன் என்டால் இப்பதான் லண்டனில வீடு வாங்கினவா. அதோட பிள்ளைகளின்ர படிப்பும். அதால ஒரு ஐந்தாறு மாதத்திற்கு பிறகு தான் வருவா என்று தேவகி கூறிய தகவல் இது.

நிர்மலா ஒவ்வொரு நாளும் டொலிபோன் கதைக்கும் போது அடுத்த மாதம் வாறன் எண்டு சொல்லிச் சொல்லியே முகமாலைப் பாதையும் மூடியாச்சு. இனி எப்படி வருவது? எல்லாம் கஸ்ரம். நீ கொழும்புக்கு வாணை. வந்து அக்கா வீட்டை நில். அக்கா வீடும் சும்மா தானே இருக்கு எண்டு நிர்மலா கூற.

இப்ப இரண்டு மாதமாய் கொழும்புக்கு போற அடுக்கு. கிழவிதோட்டமே களை கட்டி விட்டது குஞ்சி கொழும்புக்கு போகப் போறா எண்டு. குஞ்சியும் வெளிநாட்டில இருக்கிற பிள்ளைகளுக்கு பைக்கற்று பண்ணி தபாலில் அனுப்ப மிளகாய் அரைக்கிறது. பொரி அரிசி மா திரிக்கிறது எண்டு ஒரே ஆரவாரம்;. சனத்தோட கதைக்க கூட நேரம் இல்லை. இவ்வளவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பூப்புடுங்கி கிழவிதோட்ட பிள்ளையார் கோவிலுக்கு ஒரு மாலை கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் காலைச் சாப்பாடு. சில நேரம் மத்தியானத்திற்கும் சேர்த்து உலை வைக்கப்படும். இத்தனைக்கும் இடையிடையே கொழும்புக்கு போன் பண்ணி அங்க இருக்கிற செல்லம்மாக்காவின் மகள்ளுடன் தனது பிரயாண ஒழுங்குகளை உறுதிப்படுத்திக் கொள்வார். போகும் திகதி கொழும்பில் வந்து விமானத்தில் வந்து பின்னர் பஸ்சில வெள்ளவத்தையில இறங்கிற இடம். நேரம் எல்லாம் இப்படியென ஏற்பாடு. இதனை பார்த்த பேரன் “என்ன குஞ்சி அமைச்சர் போற மாதிரி ஒழுங்குகள் நடக்குது” என்றான். “உனக்கு என்னடா விளையாட்டாய் இருக்கு. கொழும்புக்கு போறது எண்டால் சும்மாவோ விதானையிட்ட போக வேணும் பிறகு ஏஜியேட்ட போக வேணும் எண்டு எத்தனை வேலைப்பாடு. நீ என்னென்டா என்னோட விளையாடுறாய்” என செல்லமாக கோபித்தாள்.

கொழும்புக்கு போற நாளும் வந்திட்டுது. நாளைக்கு பயணம். இவா செல்லம்மக்கா சொன்னவா''பலாலியில செல் விழுதாம்'' ஒரு மோதகப்பூசையை பிள்ளையாருக்கு செய். அவா சொல்லுறது சரிதான் முதல் முதல் விமான பயணம். எண்டாலும் கிழவி தோட்ட பிளளையார் கைவிட மாட்டார். எண்டாலும் பாருங்கோ இங்க கொஞ்சப்பேருக்கு முகம் சரியில்லை. இந்த வயசிலையியும் கொழும்புக்கு போக வேணுமோ எண்டு. அதுக்கு என்ன செய்யிறது? அந்த நேரத்தில கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்த படியால் தாயை கூப்பிடுதுகள். சில நேரம் இவா கனடாவிற்கு போயிடுவவாம் எண்டு சில பேரின் சில்லறைக் கதை. நான் எண்டெண்டு போவன். இஞ்ச கோவிலுக்கு மாலை கட்டிக் குடுக்க வேணும். இவன் பேரனின் கலியாணம் முடிய ஊருக்கு வந்திடுவன். எண்டு தனக்கு அண்டிய ஆட்களுக்கு சொன்ன கதை இது.

இண்டைக்கு பயணம் எல்லா ஒழுங்கும் சரி. கொழும்பில் இருந்து சிக்னல் கிடைத்து விட்டது அங்கு இறங்கும் போது அழைத்து செல்வதற்கு.

“டே ஜெயம் இவன் சீரிபி கிருஸ்ணபிள்ளையிட்ட காருக்கு சொல்லு உன்ர ஆட்டோவில போகலாம் தான். கரவெட்டியில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குள்ள நாரி முறிஞ்சு போகும்” நடக்க முடியா நிலையிலும் பெரிய சூட்கேசுடன் குஞ்சியின் கொழும்பு பயணம் ஆரம்பம். கதைக்கமா இருந்தவையிலும் பயணம் அனுப்பும் சாட்டில் கொழும்பில் உள்ள பிள்ளைகளுக்கு பார்சல் கொடுக்க வந்திருந்தனர். “எணை குஞ்சி இதை குறை நினைக்கமா கொண்டு போ நீ போன் பண்ணு பிள்ளைகள் வந்து எடுக்குங்கள்” என்று தாளம் போட்ட கதைகள். சரி சரி எங்கட சனத்தின்ர குணமே இதுதான். தேவையெண்டால் தான் வருவினம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு காருக்கு ஏறினாள். பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுக் கொண்டு எல்லாருக்கும் கையசைத்து விடை பெற்றாள். இனி வெள்ளவத்தையில போய் இறங்கின பிறகுதான் நிம்மதி.

“கிழவி தோட்ட பிள்ளையாரே எவ்வளவு சனம் போகுதுகள் நான் மட்டும் கொழும்புக்கு போக வேணும் எண்டால் எங்கட ஊர்ச்சனத்திற்கு விடியாது” எணை அம்மம்மா எங்க கொழும்புக்கே என சக பிரயாணிகளின் விசாரணை. இதிலேயும் பாருங்கோ ரகசியமாக சில இளம்வட்டங்கள் கதைக்கிறது கேட்குது. “அங்க பார் கிழவிதோட்ட கிழவியை பெரிய சூட்கேசோட வெளிக்கிட்டுட்டா..பிள்ளைகள் அனுப்பிற காசில விசிட் பண்ணுறா.” இது குஞ்சியின்ர காதில விழுந்தாலும் காட்டிக் கொள்ளமால் பிரயாணத் துணைக்கு ஆள் வேணும். எண்டாலும் எங்கட சனம் நல்ல கெட்டிக்காரர் தான். எங்க இருந்து வாறன் எண்டதை என்ர சூட்கேசில இருந்ததை பார்த்து கண்டுபிடித்து கதைக்க தொடங்கிடுங்கள். பிளேனும் வெளிக்கிட்டு விட்டது. “ஏடா சுவாதம் குத்துவனே..பிளேனை மேலே தூக்கிப் போட்டு பேந்து கொஞ்ச நேரத்தில நிற்கிற மாதிரி இருக்கு..நான் நினைச்சன் சரி. இதோட என்ர கதை சரி. எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பேந்து தான் பக்கதில இருக்கிற பிள்ளை சொன்னாள் அம்மம்மா கொழும்பு வந்திட்டுது. என்னால நம்பவே முடியேல்லை. கொழும்பில வந்து இறங்கியாச்சு. எங்க அந்த இளம்வட்டங்கள் என குஞ்சியின் கண்கள் தேடின. ஒரு மாதிரி குஞ்சி பெடியளை கண்டு பிடிச்சிட்டா. “ யார் தம்பி கிழவி தோட்ட சனத்தை பற்றி கதைச்சது? கிழவி தோட்டத்தாரை பற்றி தெரியுமோ நல்லவங்கள் கோபம் வந்தால் தெரியாது.” எனக் காரசாரமாக விளாச பெடியள் நிற்கிற இடம் தெரியமால் மறைஞ்சிட்டுதுகள்.

வெள்ளைவத்தையில் வந்து இறங்க ஒரு ஆட்டோ வந்து பக்கதில நிண்டுது. ஏறுங்கோ அம்மா எங்க போக வேணும் கொண்டு போய் விடுறன். இது கொழும்பு ஆட்டோகாரனின் அன்பு வழியும் வார்த்தைகள். “நல்ல கதை எனக்கு தெரியாதே கொழும்புப் புதினம். போன முறை அன்னம்மாக்கா வந்து எல்லாத்தையும் குடுத்திட்டு வெறுங்கையோட போனது. இவர் வந்திட்டார்” இதற்கு முதல் நிர்மலா சொல்லிய அறிவுறுத்தலும் நான் சொன்ன ஆட்கள் வருமட்டும் இருக்கிற இடத்தை விட்டு அசையக் கூடாது.

இப்போது கொழும்பில் குஞ்சி தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு ஊரில் இருக்கும் உறவினர்களுடனும் வெளிநாட்டில் இருக்கும் பேரப் பிள்ளைகளுடனும் தனது பயண அனுபவத்தை கதைத்துக்கொண்டு இருக்கிறா.

ஜோர்ஜ் புஷ்சின் தோளில் ஏறி ஆடிய இந்திய பெண் (ஒரு சூடான வீடியோப் பதிவு)

அண்மையில் யூரியூப்பில் ஏதோச்சையாக இந்த வீடியோவை காணக் கிடைத்தது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு பாடலையும் வேறு நினைவூட்டுகின்றது. எந்தப் பாடல் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

வள்ளி லண்டனில்

வள்ளி இப்போது லண்டனில் இருக்கிறாள். உங்களுக்கு தெரியுமோ? அவளுக்கு குடியுரிமையும் கிடைத்து விட்டது.

என்ன யோசிக்கிறியள்..? நான் சொல்வது உண்மை. ஓம் எங்கள் நாட்டு மக்களை விட அதிகமாக பிறநாட்டு மக்களும் அவளை போய் பார்த்து வருகின்றார்களாம்.

நீங்கள் நல்ல யோசிக்க வேண்டாம். என்ன விசயம் என்டால் பாருங்கோ.


சிறீ லங்கா அரசாங்கத்தாலை 1981ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஒரு நினைவு பரிசாக ஒரு குட்டி யானை ஒன்று வழங்கப்பட்டது. அந்த யானைக்கு பெயர் தான் வள்ளி.

இந்த வள்ளி யானை இப்போது லணடனில் உள்ள ‘’வேல்ஸ்’’ முருகன் ஆலயத்தின் அருகில் இருக்கின்றது. தற்போதும் சுகத்துடன் வாழும் வள்ளி 3 தொன் இடையும் 8அடி உயரமும் உடையது.

மேல் குறிப்பிட்ட ஆலயத்திற்கு செல்லும் பத்தர்கள் முருகனையும் தரிசித்து கொண்டு வள்ளியிடமும் சென்று போகின்றனர். பாருங்கோ யானைக்கு சிட்டிசன் குடுக்கிறவை எங்கட ஆக்களுக்கு குடுக்க மாட்டினமோ..?

குருதியில் குளித்த எழுதுகோல்

ஒ......அந்த கொடிய கணங்கள்
என் இதயத்தில் கனக்கின்றன
இது உங்கள் இதயத்திலும் பதியட்டும்.......


பாவிகள் கொன்ற என்
பிஞ்சு சோதரனின் சட்டைப்பையில்
குருதியில் குளித்த எழுதுகோல் எழுதுவதில்



எங்கள் எழைக்குடிசை அடுப்பில்
அரிசி வெத்தும் வேகாத வேளை.......
எல்லாவீடும் உண்டு உறங்கும் வேளையது
பள்ளியிலிருந்து வந்த தம்பி
பசியோடு ஆவலாதிப்பட்டுண்டு
ஆறும் வேளை........அக் கொடுகை நிகழ்ந்தய்யோ.


வானலையில் வந்த வல்லூகளின்
இரண்டு எச்சங்கள் விழுந்து சிதற
காதைக் கிழிக்கும் பேரோசை
குடிகள் பற்றி எரியும் சுவாலை
அதனிலும் மேலேழும் அவலக் குரல்கள்



எரியும் குடிசை நோக்கி
என் கால்கள்விரைகின்றன
மனமோ சிதறி சுழன்றடிக்குது.


வெந்த குடிசையின் வெளியே
செல்ல பூளையின் சிவத்த தசை
வீடென்பது அதொரு கொங்கனவாய்



‘’சின்னவன் சின்னவன்’’
என் மனம் கலங்குகின்றது
அங்கே அங்கே........ அந்தக் கொடுமை
உண்ட சோறு வெளியே
சோற்றுக் கிண்ணியில் மண்டைக் குழம்பு......


இனியும் எத்தை உயிர்ரோ....
வல்லூறின் பசிக்கு இரையாகுமோ?

அறுபதுகளில் ஆரம்பித்து அறுபதைத்தாண்டும் தில்லை

இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ். தில்லைநடராஜா தனது 60 வது வயதினை பூர்த்தி செய்துள்ளார்.

07.07.1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வடமாராட்சியில் உள்ள உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் திரு.திருமதி சிங்கரம்பிள்ளை இராஜாம்மாள் தம்பதியினர்க்கு மூத்த புதல்வனாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை வடமாராட்சியில் புகழ்பெற்ற பாடசாலைகளின் ஒன்றான உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

சிறுவயதில் இருந்து இவர் கல்வியிலும் இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வந்தார். சிறுவயதில் பேச்சு போட்டிப் ,கட்டுரை போட்டி என்பனவற்றில் பங்குபற்றி பல பரிசுகளை பெற்றுள்ளார். பாடசாலை மாணவனாக இருக்கிற காலத்தில் 14 வயதில் “மாணவன்” என்ற சஞ்சிகையை அச்சிட்டு அதன் ஆசிரிராக இருந்தார். எஸ்.ரி.ராஜன் என்ற புனைப்பெயருடன் அந்த சஞ்சிகையை நடாத்தி வந்தார்.

1967 ஆம் ஆண்டு எழுதுனர் பரீட்சையில் சித்தியடைந்து, அரச சேவையில் நுழைந்தார். முதல் சேவையை எழுதுனராக கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியலத்தில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் நுவரெலியா, கல்கிசை , கொழும்பு போன்ற இடங்களில் கடமையாற்றினார்.

1978 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மூலம் முதல்முதல் கூட்டுறவு திணைக்களத்தில் உதவி ஆணையாளராக வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் கடமையாற்றினார்.

1989 இல் வடக்கு கிழக்கு மாகாண கடற்றொழில் பணிப்பாளராகவும், 1992 தொடக்கம் 1994 ஆண்டுவரை வவுனியா அரச அதிபராகவும், 1995 -1997 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி அரச அதிபராகவும், 1998 – 1999 வரை இந்து சமய திணைக்கள பணிப்பாளராகவும், 1999 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நியமனம் பெற்று இன்று வரை பணியாற்றி வருகின்றார்.

1993 ஆம் ஆண்டு பகுதியில் வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய போதும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். அந்த வேளையில் அவரை பலர் தடுத்தனர். அங்கு செல்ல வேண்டாம் என்று. எமது மக்களுக்காகவே இப்பணியை மேற்கொள்ளுகின்றோம். இதுவும் மக்களுக்காகவே செல்லுகின்றேன் என கூறி சென்று நிலைமைகளை கவனித்து அங்கு உள்ள மக்களின் அவல நிலைமைகளை ஊடகங்களில் கொண்டு வந்த முதல் தர அரச உத்தியோகத்தர் ஆவார்.

1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திரு.பொன்னம்பலம் யாழ்ப்பாண அரச அதிபராக கடமையேற்றதை தொடர்ந்து பலரின் வேண்டுகோளின் படி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக பதவியேற்றார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் செய்த பயன்மிகு வேலைத்திட்டங்கள் பல. எந்த நேரமும் மக்கள் அவரை சந்திக்கவும் ஒழுங்கு செய்திருந்தார்.

அவரின் உத்தியோகபூர்வ விடுதியிலும் சந்திப்பு மேற்கொள்ளவும் ஒழுங்கு செய்திருந்தார். இந்த வேளையில் யாழ்ப்பாண இடம்பெயர்வு இடம்பெற்றது. இந்நேரத்திலேயே இரவு பகல் என்று பாராது மக்களுக்கான வேலைத்திட்டத்ததை மேற்கொண்டார்.

ஒரு சமயம் அவரை சந்திப்பதற்கு அவரின் அலுவலகத்திற்கு சென்று இருந்த போது கிளாலி கடற்கரைக்கு சென்று விட்டதாக செய்தி கிடைத்தது. அவரின் நாங்கள் அவசியம் சந்திக்க வேண்டிய நிலைமை இருந்ததால் கிளாலிக்கே சென்று இருந்தோம்.

அங்கு அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற இடம்பெயர்ந்தவர்களை படகில் இருந்து வெளியேறுவதற்கு உதவிக்கொண்டு இருந்தார். கடற்கரையில் நின்று கொண்டே அங்கு வந்து சேர்ந்தவர்களை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். கிளிநொச்சியில் இருந்து தகவல் பெறக்கூடிய வசதியோ தகவல் அனுப்ப கூடிய வசதியோ இல்லாத வேளையில் கூட, இவ் இடம்பெயர்வின் அவலங்கள் உலக ஊடகங்களின் பிரதிபலிக்க காரணமாய் இருந்தார்.

அரச அதிபராக இருந்த போதும் சில சமயங்களில், சைக்கிளிலேயே அவரின் வேலைத்திட்டம் நகர்ந்தது. சைக்கிளில் சென்று மக்களின் சேவையை செய்தார். அந்த மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர் தில்லைநடராஜா. இதனை தொடர்ந்து கிளிநொச்சி இடப்பெயர்வு இடம்பெற்றது. இந்த வேளையில் மயிரிழையில் உயிர்தப்பினார்

தில்லைநடராஜா. கிளிநொச்சி நகரில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருந்த வேளை அவர்களை கவனிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இயங்கியது. இந்த அலுவலகம் ஒரு மரத்தின் கிழேயே இயங்கியது. அப்படி இருந்த போதும் வேலைகள் வேகமாய் நகர வைத்தார் இவர்.

14 வயதில் இலக்கிய பணியில் ஈடுபட தொடங்கினார். அப்போது சிறுவர்களின் மனதில் இடம்பிடித்த “சுதந்திரன்” வார இதழில் “மந்திரக்கண்ணாடி” என்ற சிறுவர் தொடர்கதை எழுதி “மந்திரக்கதை மருமகன்” என்று பத்திரிகை ஆசிரியரின் பாராட்டை பெற்றார். பின்னர் இவர் வவுனியா அரச அதிபராக இருந்த வேளையில் மந்திரக்கண்ணாடி நூலையும் கடற்கன்னி என்ற இன்னொரு இவரது சிறுவர் கதை நூலையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக்காக வெளியிட்டார்.

இவரது முதலாவது சிறுகதை தொகுதியான “நிர்வாணம்” 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு பரிசிற்கும் பாராட்டுக்கும் உரியவரானார். இதனை தொடர்ந்து “அப்பா” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை வாசித்த முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

வடக்கு போர்க்கால சூழலை படம் பிடித்து காட்டும் “நம்பிக்கையுடன் நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம்” என்ற நூல் இவரது சமூக அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “கல்யாணம் முடித்துப் பார்” என்ற நகைச்சுவை சிறுகதை நூல் இலக்கியத்தில் இவரின் பல்பரிமாண தோற்றத்திற்கு ஒரு சான்றாகும்.

நாடகத்துறையிலும் புகழ்பெற்றவர்களான கே.எஸ் பாலச்சந்திரன், எஸ். எஸ் கணேசபிள்ளை ஆகியோருடன் பல நாடகங்களை நடித்துள்ளார். “அசட்டு மாப்பிள்ளை”நாடகத்தில் தமிழ்பண்டிதர் பாத்திரமாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இன்றும் தொடர்ந்தும் எழுதியும், கலைத்துறையிலும், அரசுபணியிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி இளமையுடன் கடமை புரியும் உடுவைக்கு 60 வயதாகிவிட்டது என்றால் யார் தான் நம்புவார்கள். தொடர்ந்து கடமையிலும் இலக்கிய பணியிலும் செயற்பட்டு அவரின் பணி தொடரட்டும்.

வீரகேசரி (வாரமலர்)
15-07-2007

வீரகேசரிக்கு 77 வயசு!!

இலங்கையின் மிகப் பெரிய தமிழ்ப் பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற. வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சிய நூல் வெளியீடும் பவள விழா சிறுகதைக் போட்டியளாருக்கான பரிசளிப்பு விழாவும் இடம் பெற்றது.

கொழும்பு குளோபல் டவர்ஸ் கோட்டலில் 19-08-2007 அன்று மாலை 4மணிக்கு வீரகேசரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான திரு.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நிகழ்வுகள் அரம்பமாகின.

மேற்படி நிகழ்விற்க்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் திரு. சந்திரசேகரம் எழுத்தாளர் தெளிவத்தை யோசப், ஆகியோயர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள். இதனை விடக் குறிப்பிட்டு கூடிய வகையில் பல எழுத்தாளார்களும், இலங்கையில் இருந்து போட்டி போட்டு வெளி வருகின்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தது விழாவின் விசேட அம்சமாகும்.

இவ் நூல் மொத்தம் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது. இன் நூலினை வீரகேசரி வார மலரின் ஆசிரியர் திரு.வி.தேவராஜ் தொகுத்துள்ளார்.

பவள விழா சிறுகதை போட்டிக்கு. 1000 மேற்பட்ட சிறுகதைகள் வந்தாகவும் கூடுதலான சிறுகதைகள் இளம் படைப்பாளிகளுடையது. என மேற்படி நிறுவனத்தின் நிறுவக இயக்குனர் திரு.குமார் நடேசன் நூல் குறிப்பிட்டுள்ளார்.

இவ் சிறுகதைகளை எழுதியுள்ளவர்கள் பல் வேறுபட்ட தளங்களில் இருந்து எழுதியிருப்பது கதைகளை வாசிக்கும் போது உணர முடிகின்றது.

இந்த நூலின் தொகுப்பாசிரியர் தனது தொகுப்புரையில் இப்படி எழுதி செல்லுகின்றார்.

ஊடகம் ஒன்றின் பிரதான பணிகள். வாசகர்களுக்கு செய்திகளை அளித்தல், கருத்துருவாக்கல், அறிவுட்டல், களிப்புட்டல் என்பவையாகும். சில தசாப்தங்களின் முன்பு வரை கலையும் இலக்கியமும் களிப்புட்டும் பொழுது போக்கு. எதிர் கால சந்ததினருக்கான அறிவுட்டல் அம்சங்களே என்ற நிலமை மாறி அவை சமுதயத்தின் மேம்ப்பாட்டுக்கான சாதனங்கள் என்ற கருத்து இப்போது நிலை பெற்று விட்டது. இலங்கையில் கலை இலக்கிய வளர்ச்சிக்கென தனியான சஞ்சிகை வெளியீடுகளோ நிலையாக வெளி வரததால் கலையும் இலக்கியத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பொறுப்பில் வீரகேசரி பல காலமாக ஈடுபட்டு வருகின்றது. என அவர் தொடர்ந்து இவ்வாறு மேலும் எழுதி செல்லுகின்றார்.

ஆசிரியர் குறிப்பிட்டது போல இன்று வீரகேசரி தனது இலக்கிய படைப்புகளை பரந்து விரித்துள்ளது. உதாரணமாக என்ற பத்திரிகையையும் இளம் உள்ளங்களுக்கா மெட்ரோன் என்ற பத்திரிகையும் தனது இளை பத்திரிகையாக நடாத்தி வருகின்றது. மேற்படி போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை அசூமத் எழுதிய நிலத்தாய் என்ற கதையாகும்.

இந்த பவள விழா சிறுகதை போட்டியில் முதல் 3இடத்தையும் பெற்ற கதைகள் இளம் எழுத்தளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதும் இளம் எழுத்தளர்களை கௌரவம் செய்ததும் விசேட அம்சமாகும்.