புது வருட வாழ்த்துக்கள்

எமது இனிய புது வருட வாழ்த்துக்கள்

தினக்குரலில் பூத்த வலைப்பூக்கள்

இலங்கையில் இருந்து வெளியாகும் தினக் குரல் பத்திரிகை. வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் இது வரையும் வெளியான வலைப்பூக்களின் பதிவுகள்.



இந்த பூக்கள் மலர உரமாக இருக்கும். அன்பு உறவுகளுக்கு எனது நன்றிகள்.

இணைய தள வானொலியின் இறுவெட்டு வெளியீட்டு விழா புகைப்படங்கள்

தொடர்பான செய்தி முன்னர் தந்திருந்தேன். இறுவெட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இது.

மங்கள விளக்கேற்றும் காட்சி

தாரனி,மற்றும் தினேஸ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் காட்சி





தமிழோசை குழுவினர்




படங்கள் - தாசன்

2007 ஆண்டுக்கான சிறந்த நடிகர்

இவர்கள் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சி யார்என்று தான் பாரங்களேன்



தமிழோசை இணையதள வானொலியின் நிகழ்வில்

30-03-2008 அன்று. இலங்கை தமிழோசை வானொலியின் ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணமும் ‘’கல்லறையில் காதல் ‘’ இறுவெட்டு வெளியீட்டு விழாவும் இடம் பெற்றது.
காலை 10மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வை ‘’வானம்பாடி புகழ்’’ யோகராஜா தினேஸ்குமார்;‘’இளம் வானொலிக் குயில்’’ தாரானி லிங்கரெட்ணம் ஆகியோர் தொகுத்து வழங்க. மங்கள விளங்கிளை மத குருமார்கள் , பிரதம விருந்தினர்கள்கள் எற்றி வைக்க வரவேற்ப்புரையை ‘’பொப்பிசை திலகம்’’ திரு.இராமச்சந்திரன் நிகழ்த்தினார்.

சரியாக 11மணிக்கு ‘’இஸ்லாமிய நிகழ்ச்சி ‘’ அங்குரார்பணம் ‘’தமிழோசை இணைய தள வானொலியின்’’ முகாமைத்துப் பணிப்பாளர் திரு.எ. எம். ஜெசீம் தலமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் திரு.இமாம் அவர்களும், பா.உறுப்பினர் ‘’மக்களின் காவலன்’’ மனோகணேஸ்;, மற்றும் பிரமுகர்களும் இஸ்லாமிய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

சிறப்புரைகளை தொடர்ந்து . கிருஸ்ணி ஜெயநாயகம் அவர்களின் எழுத்து வடிவில் உருவான ‘’கல்லறையில் காதல்’’ என்னும் வானொலி நாடகத்தின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நாடகத்திற்க்கான பின்னனி இசையை கி.துசியந்தன் வழங்க. நாடகத்தினை சிறந்த முறையில் தயாரித்து வழங்கியுள்ளார் ‘’உங்கள் எ.எம். ஜெசீம்’’ அவர்கள். வெளிநாட்டில் இருந்து பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பொற்றோர்களின் மத்தியில் தனது காதல் நாயகனுக்காய் காத்திருக்கும் சாந்தியின் வாழ்வில் நிகழும் சம்பவத்தை நாடக வடிவில் கொண்டு வந்துள்ளார் கிருஸ்ணி அவர்கள்.

காத்திருக்கும் சாந்தியின் இறுதி முடிவு எப்படி அமைய போகின்றது. சாந்தி தனது காதல் நாயகனை கரம் பிடிக்க முடியுமா? கேட்டுதான் பார்ங்களேன்