வீரகேசரிக்கு 77 வயசு!!

இலங்கையின் மிகப் பெரிய தமிழ்ப் பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற. வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சிய நூல் வெளியீடும் பவள விழா சிறுகதைக் போட்டியளாருக்கான பரிசளிப்பு விழாவும் இடம் பெற்றது.

கொழும்பு குளோபல் டவர்ஸ் கோட்டலில் 19-08-2007 அன்று மாலை 4மணிக்கு வீரகேசரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான திரு.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நிகழ்வுகள் அரம்பமாகின.

மேற்படி நிகழ்விற்க்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் திரு. சந்திரசேகரம் எழுத்தாளர் தெளிவத்தை யோசப், ஆகியோயர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள். இதனை விடக் குறிப்பிட்டு கூடிய வகையில் பல எழுத்தாளார்களும், இலங்கையில் இருந்து போட்டி போட்டு வெளி வருகின்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தது விழாவின் விசேட அம்சமாகும்.

இவ் நூல் மொத்தம் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது. இன் நூலினை வீரகேசரி வார மலரின் ஆசிரியர் திரு.வி.தேவராஜ் தொகுத்துள்ளார்.

பவள விழா சிறுகதை போட்டிக்கு. 1000 மேற்பட்ட சிறுகதைகள் வந்தாகவும் கூடுதலான சிறுகதைகள் இளம் படைப்பாளிகளுடையது. என மேற்படி நிறுவனத்தின் நிறுவக இயக்குனர் திரு.குமார் நடேசன் நூல் குறிப்பிட்டுள்ளார்.

இவ் சிறுகதைகளை எழுதியுள்ளவர்கள் பல் வேறுபட்ட தளங்களில் இருந்து எழுதியிருப்பது கதைகளை வாசிக்கும் போது உணர முடிகின்றது.

இந்த நூலின் தொகுப்பாசிரியர் தனது தொகுப்புரையில் இப்படி எழுதி செல்லுகின்றார்.

ஊடகம் ஒன்றின் பிரதான பணிகள். வாசகர்களுக்கு செய்திகளை அளித்தல், கருத்துருவாக்கல், அறிவுட்டல், களிப்புட்டல் என்பவையாகும். சில தசாப்தங்களின் முன்பு வரை கலையும் இலக்கியமும் களிப்புட்டும் பொழுது போக்கு. எதிர் கால சந்ததினருக்கான அறிவுட்டல் அம்சங்களே என்ற நிலமை மாறி அவை சமுதயத்தின் மேம்ப்பாட்டுக்கான சாதனங்கள் என்ற கருத்து இப்போது நிலை பெற்று விட்டது. இலங்கையில் கலை இலக்கிய வளர்ச்சிக்கென தனியான சஞ்சிகை வெளியீடுகளோ நிலையாக வெளி வரததால் கலையும் இலக்கியத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பொறுப்பில் வீரகேசரி பல காலமாக ஈடுபட்டு வருகின்றது. என அவர் தொடர்ந்து இவ்வாறு மேலும் எழுதி செல்லுகின்றார்.

ஆசிரியர் குறிப்பிட்டது போல இன்று வீரகேசரி தனது இலக்கிய படைப்புகளை பரந்து விரித்துள்ளது. உதாரணமாக என்ற பத்திரிகையையும் இளம் உள்ளங்களுக்கா மெட்ரோன் என்ற பத்திரிகையும் தனது இளை பத்திரிகையாக நடாத்தி வருகின்றது. மேற்படி போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை அசூமத் எழுதிய நிலத்தாய் என்ற கதையாகும்.

இந்த பவள விழா சிறுகதை போட்டியில் முதல் 3இடத்தையும் பெற்ற கதைகள் இளம் எழுத்தளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதும் இளம் எழுத்தளர்களை கௌரவம் செய்ததும் விசேட அம்சமாகும்.