வள்ளி லண்டனில்

வள்ளி இப்போது லண்டனில் இருக்கிறாள். உங்களுக்கு தெரியுமோ? அவளுக்கு குடியுரிமையும் கிடைத்து விட்டது.

என்ன யோசிக்கிறியள்..? நான் சொல்வது உண்மை. ஓம் எங்கள் நாட்டு மக்களை விட அதிகமாக பிறநாட்டு மக்களும் அவளை போய் பார்த்து வருகின்றார்களாம்.

நீங்கள் நல்ல யோசிக்க வேண்டாம். என்ன விசயம் என்டால் பாருங்கோ.


சிறீ லங்கா அரசாங்கத்தாலை 1981ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஒரு நினைவு பரிசாக ஒரு குட்டி யானை ஒன்று வழங்கப்பட்டது. அந்த யானைக்கு பெயர் தான் வள்ளி.

இந்த வள்ளி யானை இப்போது லணடனில் உள்ள ‘’வேல்ஸ்’’ முருகன் ஆலயத்தின் அருகில் இருக்கின்றது. தற்போதும் சுகத்துடன் வாழும் வள்ளி 3 தொன் இடையும் 8அடி உயரமும் உடையது.

மேல் குறிப்பிட்ட ஆலயத்திற்கு செல்லும் பத்தர்கள் முருகனையும் தரிசித்து கொண்டு வள்ளியிடமும் சென்று போகின்றனர். பாருங்கோ யானைக்கு சிட்டிசன் குடுக்கிறவை எங்கட ஆக்களுக்கு குடுக்க மாட்டினமோ..?

0 comments: