‘’அண்ணை றைற்’’ கலை துறையில் நாற்பது வருடங்கள்



சுமார் பத்து வருடங்களுக்கு முன். வயறு குழுங்க குழுங்க சிரித்து நாடங்களை ரசித்த இனிமை இப்போது உண்டா? என்று நோக்கும் போது. அவை இப்போது மறைத்து போய் கொண்டு இருக்கின்றது என்றும் கூறலாம்.

இதற்க்கான காரணத்தை நோக்கும் இடத்து ரசிகர்களின் ரசிப்பு தன்மை இப்போது இல்லையா? அல்லது நகைச்சுவை நாடங்களின் வருகை இல்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது. இல்லாவிடில் தினம் தினம் சோகத்தில் முழ்கியுள்ள இன்றைய மக்கள் எப்படிதான் சிரிப்பதோ?

ஆனால் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும். இன்றைக்கும் மனதில் இருந்த சோகங்கள் எல்லாம் மறைந்து புத்துனர்ச்சியை தரும் நாடங்களிள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘’அண்ணை றைற்.’’

இலங்கையில் ‘’அண்ணை றைற்’’ என்ற தனி நடிப்பு நாடகத்தின் மூலம்தான்; தனி நடிப்பு அறிமுகம்மானது. இந்த நாடககர்த்தா யார் என்றால் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட நடிகர். கே.எஸ். பாலச்சந்திரன் தான்.

கடந்த 2006ம் ஆண்டுடன் இவர் கலையுலகிற்க்கு வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்த கலைஞனை பற்றி சிறு அறிமுகம்.

யாழ்ப்பாணம் கரவெட்டி கிழவி தோட்டத்தில் திரு-திருமதி சுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கே.எஸ். பாலச்சந்திரன் ஊர் மக்களால் கணேஸ் என்று அழைக்கப்பட்டார்.

சிறு வயது முதல் படிப்பிலும் கலைத் துறையிலும் அதிகமாக ஈடுபாடு காட்டினார். பாடசாலை நாட்களில் பல நாடங்களில் நடித்தார். இந்த நாட்களில் தான் பேராசியர் சிவத்தம்பியின் தொடர்பு கிடைத்தது.



இவர் பாடசாலை கல்வியை முடித்து கொண்டு இலங்கை இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றினார். இந்த கால பகுதியில் அங்கு பணிபுரித்த புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். கணேசபிள்ளையுடன் பழக்கம் எற்பட்டு அவருடன் இனைத்து பல நாடங்களில் நடித்தார்.

1967ம் கால பகுதியில் ஆண்டு இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். 1970ம் ஆண்டு ‘’அண்ணை றைற்’’ கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு மக்கள் முண்ணிலையில் தனி நடிப்பாக நடிக்கப்படடது.


இதற்க்கு பின் இலங்கையின் பல மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும். மேடையேறின. இந்த ‘’அண்ணை றைற்’’ நாடகம். இத் பெருமைக்குரிய நடிகர் கே.எஸ். பாலச்சந்திரன் தொலைக்காட்சி நடிகரும் கூட இலங்கையில் வெளியான ‘’வாடைக்காற்று’’ என்ற படத்திலும். அண்மையில் கனடாவில் வெளியான ‘’உயிரே உயிரே’’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு பெருமை சேர்த்த பல நாடங்கள் இப்போதது ஒலி இழைகளாக வந்துள்ளது. அவையவான ‘’வாத்தியார் வீட்டில்’’ (பாகம் 1,2,3) ‘’அண்ணை றைற்’’ போன்றவையாகும்.

இப்படியான கலைஞனை கலை குடும்பம் கௌரவிக்கவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டுடன் கே.எஸ். பாலச்சந்திரன் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில். கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம் , பாரதி புறொடக்சன்ஸ் வழக்கும் கே.எஸ். பாலச்சந்திரனின் ‘’அண்ணை றைற்’’ முதலான தனி நடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவெட்டு (cd) வெளியீட்டு விழா ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஞாயறுக்கிழமை scarborough civic centre மண்டபத்தில் இடம் பெற்றது.

0 comments: