மதியம் புதன், செப்டம்பர் 26, 2007

கனவு காணும் வாழ்க்கையா?




மிகுந்த மகிழ்ச்சியில்
ஊர் அடைய.........

சின்னப்பு அண்ணையின்
வயல் பரிதாபமாக வரவேற்கின்றது..........

பெரியயப்பர் பெரியபுராணம்
படிக்கும் கொட்டகை
வல்லூறின் எச்சத்திற்க்கு இலக்காகி


நான் தவழ்ந்த வீடு
தாங்க முடியாத வேதனை.

கொஞ்சம் நின்று பார்க்கின்றேன்!

எமக்கு மீண்டும் வசந்தம்
வருமா... என்று?

எத்தனை கனவுகள்....

எமக்கு வாழ்க்கை வழமையாகி விட்டது.

நாம் இன்று கனவுகள்
சுமக்கும் தேசங்களாய்..........