அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர் ஒருவருடன் நேர் காணல்


இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிடும் படியாக 1983ம் ஆண்டின் பின்னரான இனக்கலவரத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டிற்கும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து சென்றார்கள்.இவர்கள் அங்கு சென்று பல வருடங்கள் ஆகியும் தமிழர்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு விடாமல் பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

இவ் விடயம் தொடர்பாகவும் அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ் மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ளவும் இலங்கைக்கு வந்த தமிழ் பிரமுகர் எஸ்.சற்குணலிங்கம்; அவர்களைச் சந்தித்த போது ஆரவாரத்திற்கு வழங்கிய செவ்வியினைத் தருகின்றேன்.

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த சற்குணலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் கூட்டுறவு திணைக்களத்தின் தலைமைப் பரிசோதகராக கடமை புரிந்து 1987ம் ஆண்டு முதல் இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் அஸ்வுரேலியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்ற ஈழத்தமிழ் சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் சங்கம் உட்பட பல தமிழ் அமைப்புக்களின் உறுப்பினராக இருந்து தம்மாலான பணிகளை ஆற்றி வருகின்றார்.

இவரிடம் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள்

கேள்வி- நீங்கள் 1987ம் ஆண்டில் இருந்து இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றீர்கள். மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பின் தாயக மண்ணில் கால் பதித்திருக்கிறீர்கள் இதனை எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில்- நான்1987 ஆண்டு இலங்கையில் ஏற்ப்பட்ட போர் சூழல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றேன். மீண்டும் நான் பிறந்த மண்ணில் கால் பதித்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். போர் மேகம் அப்படியே இருந்தாலும் 19வருடங்களின் பின் நிறைய மாற்றங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

கேள்வி-இலங்கையில் இருந்து தற்போது அவுஸ்ரேலியா நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது தமிழ் மக்கள் எவ்வாறு இருக்கின்றார்கள்? எப்படி எமது கலாசாரம் இருக்கின்றது.

பதில்- அவுஸ்திரேலியா இலங்கையை போல் 250மடங்கு பெரிய நிலப்பைக் கொண்ட ஒரு கண்டமாகும் அங்கு. 1.சிட்னி 2.மல்பேன் 3.பிறிஸ்பேன் 4.கன்பரா 5.அடிலயிட் 6.பேத் 7. தஸ்மேலனியா 8.டாவின் என எட்டு பெரிய மாநிலங்கள் உள்ளன. அங்கு இருக்கின்ற தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றார்கள். சகலருக்கும் கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலான தமிழ் மக்கள் உயர் தொழிலில் இருக்கின்றார்கள்.

மேலும் எமது நாட்டைப் போல் எமது தமிழ் மக்கள் தமது கலாசாரத்தைப் பேணும் விடயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் மொழி கல்வி நடவடிக்கைகள் இலக்கிய விழாக்கள் நடன அரங்கேற்ற நிகழ்வுகள் கூடுதலாக நடைபெறுகின்றன. ஈழத்தமிழ்ச் சங்கம் 9தமிழ்ப்பாடசாலைகளை நடத்தி பிள்ளைகளுக்கு கருத்து தமிழ்க் கல்வியை ஊட்டுகின்றது.
இதே போன்று வேறு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவற்றிக்கு அவுஸ்திரேலியா அரசும் உதவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

கேள்வி- இங்கு வாழ்ந்து வருகின்ற பல முதியவர்கள்
அங்கு இருக்கின்ற பிள்ளைகளால் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அங்கு உள்ள அரசாங்கத்தால் எவ்வகையானஉதவிகள்வழங்கப்பட்டுகின்றது.

பதில்- முதியோர்கள் வீட்டில் எப்படி இருந்தாலும் அரச அமைப்பைப் பொறுத்த வரையில் அவர்கள் மூத்த பிரசைகள் என கருதப்படுகிறார்கள். முதியோர்களுக்கு வேறான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அட்டை மூலம் அவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதிகளையும் பெறவும் பிரயாணம் செய்யவும் முடியும் இதனை விட முதியோர்களுக்கு ஒய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.

கேள்வி- இலக்கிய பணிகள், சமூகப் பணிகள் எந்த வகையில் நடைபெற்றவருகின்றது.

பதில்- ஈழத்து தமிழ்ச்சங்கம் , தமிழக், கலாச்சார கழகம், என பல அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டேன். குறிப்பாக புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் தமிழ் மொழியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைளை எடுத்து வருகினறன.
சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. விழாக்களையும் நடத்துகின்றோம். தமிழ்ப் அறிஞர்களின் விழாக்களும் இதில் அடங்கும். நமது மக்கள் இவற்றில் எல்லாம் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்.

கேள்வி- மக்கள் எவ்வாறு எமது கலாசாரத்தையும் சமய வழிபாடுகளையும் பேணிக்காத்து வருகிறார்கள்

பதில்-35ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றாரகள். பல இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டு தினசரி பூசை விசேட பூசைகள் திருவிழாக்கள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. மூன்று தமிழ் அமைப்புக்கள் மூலம் பாடசாலைகளில் சனி ஞாயிறு நாட்களில் தமிழ் வகுப்புகளை நடாத்தி வருகின்றனர்.

2 comments:

said...

இவர் மெல்பன் நகரில் இருந்து வந்திருக்கிறார் என்பதைப் பேட்டியில் பார்த்தே ஊகிக்கமுடிகின்றது.

தமிழை இங்கே பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் ஒரு பாடமாக எடுக்கலாம். இது விடுபட்ட தகவல்

said...

பிரபா வணக்கம்.கண்டு பிடித்து விட்டிர்கள் :)

விடுபட்ட தகவல்லை தெரிவித்தமைக்கு நன்றி.