மதியம் புதன், செப்டம்பர் 26, 2007

சவ வண்டி


இப்போது எல்லாம் காலத்திற்கு காலம் எல்ல விடயத்திலும் மாற்றம் காணப்படுகின்றது. எனக்கு நினைவு தெரித்த நாளில் இருந்து. இறந்தவர்களை இறுதியாக தகனம் செய்ய எடுத்து செல்லும் போது பல வகையான முறையில் உடலை எடுத்து செல்வார்கள்.

தென்னை ஒலையை பின்னி அதனை அலங்கரித்து. அதில் உடலை வைத்து. தோல்களில் சுமந்து சென்று தகனம் செய்தார்கள். பின்னர் கொஞ்ச காலங்கள் செல்ல சவ வண்டியின் பழக்கம் அதிகரிக்க தொடக்கின.

ஆனால் இப்போது நிலை மாறி விட்டது. தங்களுக்கு விரும்பிய வாகணத்தில் உடலை எடுத்து செல்லுகின்றார்கள். எப்படி இருப்பினும் கிராமங்களில் சவ வண்டி பாவனை இப்போதும் உண்டு.


அண்மையில் எனது கிராமத்திற்க்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்ற போது.

எனது புகைப்பட கருவிக்குள் சிக்கிக் கொண்டது. அந்த புகைப் படத்தை நீங்கள் பார்க்கலாம்.

0 comments: