இலங்கையில் இருந்து புதிய இணைய வானொலி

அண்மைக்காலமாக இலங்கையில் திடீரென கலை இலக்கிய செயற்பாடுகள் வேகம் பெற்றுள்ளது போன்று தெரிகின்றது. வலைபதிவில் ஏராளமானவர்கள் வந்து குவிகின்றார்கள். அடுத்தடுத்து சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்குகின்றன. மிகப்பெரிய பத்திரிகை நிறுவனங்கள் சில தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இணைப்பு பத்திரிகைகளை அதிகமாக்குவதோடு, தமது இணையத் தளங்களையும் விரிபடுத்த தொடங்கி இருக்கின்றன. சக்தி தொலைக்காட்சியும் விஜய் ரிவீயின் பாணியில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து பல லட்சங்களை பரிசுத் தொகையாக அறிவிக்கின்றனர். ( விஜய் ரிவீயின் ஜுனியர் சுப்பர் சிங்கர்ஸ், சின்மயி, ஹாரிஸ் ராகவேந்திரா, தினா, மாதங்கி என தமிழ்நாட்டு பிரபலங்களும் இவர்கள் தயவால் இங்கு வந்து போய் கொண்டு இருக்கின்றனர்) இவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக ஒரு இணைய வானொலி ஒன்றும் ஆரம்பித்து பட்டிருக்கின்றது. இலங்கை தமிழோசை என்னும் பெயரில் என்னும் பெயரில் 24 நான்கு மணி நேரமும் http://www.strfm.com/ என்னும் இணைய முகவரியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

லண்டனிலும் , கனடாவிலும் இருந்து இதன் நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடக்கிறது. இதன் அங்குரார்ப்பண விழா 25-08-2007 அன்று இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ் தில்லை நடராஜா கலையகத்தை திறந்து வைத்ததோடு , அவ்வானொலியின் குறியீட்டு இசையை இயக்கி ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.


இந்த நிகழ்விற்கு மூத்த அறிவிப்பாளரான ராஜேஸ்வரி சண்முகம் , இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியர் இளையதம்பி தயானாந்தா , நாடக ஜம்பவான் மரிக்கார் எஸ். ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை வானொலியில் இருந்து ஓய்வு பெற்ற பலரும் வந்திருந்து கூடியிருந்து தமது பழைய நினைவுகளை பகிர்ந்த படியிருந்தனர்.

மரிக்கார் எஸ். ராமதாஸ் (இவர்தான் இலங்கையின் 100 நாள் ஓடிய ஈழத்தமிழ் திரைப்படங்களான கோமாளி மற்றும் ஏமாளிகளின் சொந்தக்காரர்) தளர்ந்து போயிருந்த தனது குரலினால் இவர்கள் ஆங்கிலத்தையும் கலந்து அறிவிப்பு செய்து தமிழ்க்கொலை செய்யக் கூடாது என தனது உரையில் பல தடவைகள் குறிப்பிட்டதை அவதானிக்க கூடியதாயிருந்தது.

ஆச்சரியம் என்னவென்றால் ஏறத்தாள 25 அறிவிப்பாளர்களை பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்கள். பண்பலையில் ஒலிபரப்ப அரசின் அனுமதிபத்திரத்திற்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரியவருகின்றது. மிகவிரைவில் அது பண்பலையில் வரும் என்று வீரகேசரி, தினக்குரல் எல்லாமே சேர்ந்து சொல்கின்றன. ஆனால் என்னவென்றால் இப்போது அந்த இணையத்தளத்தில் அது ஒலிக்க காணோம். நான் நினைக்கின்றேன் ஏதாவது தொழிநுட்ப கோளாறாய் இருக்கலாம் என்று. சில நாட்களில் சரி வந்து விடலாம்.




இணைய முகவரி
http://www.strfm.com/


முகவரி
இலங்கை தமிழோசை
16-1 பரகும்பா வீதி
கொழும்பு
இலங்கை

தொலைபேசி
0094602172668

4 comments:

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

இந்த வானொலி கேட்டவில்லை.ஆனால் இலங்கை வானொலி கேட்கிறேன். நேற்று கதாப்பிரசங்கம் கனகாலத்துக்குப் பின் கேட்டேன்.
மிகத் தெளிவான ஒலிபரப்பு

said...

இலங்கை வானொலி இனையதளத்திலும் வருகின்றதா? நான் கேட்டது இல்லையே.

said...

http://www.slbc.lk/
இதில் போய் கேளுங்கள். பழைய தரம் குன்றாமல் பேணுகிறார்கள்.